29 December, 2009

ததும்புகிறது @ ததும்புகிறான்

நிறைந்து ததும்புகிறதுன் யவ்வனம்

பட்டாம்பூச்சியின் மென்சிறகு
மல்லிகையின் ரம்யம்
முற்றிய நிலவின் கிரணங்கள்வரைக் கூட
நீண்டிருக்கிறது
அதன் ஆளுமையின் வசீகரம்

யவ்வனத்தின் கரத்திலிருக்கும் மந்திரக்கோல்
காலங்களை மெலிதாக்கி ஆசிர்வதிக்க
பருவங்கள் நிறம்கொள்ளத் துவங்குகின்றன

சுழித்தோடி நுரைத்துப் பொங்கும்
நதியில் எதிர்நீச்சலில்
புனல் கீறி முன்னேறும் படகுக்கு
உன் யவ்வனத்தின் பெயர் வைக்கலாம்

மலைப்பாதை வளைவுகளின்
அபாயம் குறித்து அலட்டிக்கொள்ளாத
யாத்ரீகனின் மோனத்துக்குத் தள்ளும்
அதன் லாகவம் நகர்த்துகிறதவனை
பூக்களாகவும் தற்கொலைமுனையாகவும்
இருக்கும் உச்சம் நோக்கி

-அகநாழிகை

3 comments:

நேசமித்ரன் said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

கதிர்பாரதி said...

thax

ராமலக்ஷ்மி said...

அருமை. அகநாழிகையில் வாசித்திருக்கிறேன்.