25 September, 2015

இந்த நாள் ஸச்சினால் ஆனது smile emoticon நன்றி : ஸச்சின் Sachin Sachin


========================================================
அன்போன் கதிர்பாரதி அவர்களுக்கு...... ஸச்சின்.
காய்ச்சல் ஆட்கொண்ட நாளொன்றில் மொட்டை வெய்யிலில் கால் பதித்து நீரினுள் கைகள் நனைத்து மஞ்சள் வெப்பத்தை உள்வாங்கும் சுகமென அமர்ந்து உங்கள் கவிதைகளை வாசித்தேன். எளிமையும், எளிமை என்று மட்டும் ஓர் சொல்லில் சொல்லவியலாத முதிர்ச்சியும், வசீகரமும் கொண்டவை அவை.பொதுவாக நல்ல கவிதைகள் என்று அறியப்படுபவை இருவகையாக (Personnel ஆக) உள்ளன. முதலாவது மொழிச்சிக்கல் மிகுந்த, குறைவான திறப்பை உருவாக்கும் சாத்தியமுடைய, மிகுந்த அகவயமான தன்மையுடைய இறுமாப்புக்கவிதைகள். இரண்டாவது, மொழிச்சிக்கலற்ற, பல திறப்புகளை உருவாக்கக்கூடிய, Reasonableஆன அக ஓட்டமும், Logicalஆன புற ஓட்டமும் கொண்ட Friendly கவிதைகள். இதில் உங்களது இரண்டாவது வகை.
எனது பள்ளிப்பருவத்தில் Exactஆக மேற்சொன்ன இருவகை குணங்களுடன் இரு ஆசிரியர்கள் இருந்தனர்.ஒருவர் வேதியியல் எடுத்தார். மற்றவர் இயற்பியல். இருவரும் திறமைசாலிகள்தான். ஆனால் இரண்டாமவர் அவருடைய casual ஆன அணுகுமுறையாலும், ஆளுமையாலும் எனக்குள் ஒரு ஊற்றை உருவாக்கினார். சொல்லப்போனால் நான் அவரிலிருந்தே மண்முட்டி, வேரூன்றி, மெல்லக்கிளைத்து வளர்ந்தேன் எனலாம். எனவே படைப்பளவில் உங்களவை அத்தகு திறன் வாய்ந்தவை என நம்புகிறேன். அதாவது ஆக்கப்பூர்வமானவை அல்லது ஆக்க வல்லவை.
*ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் எனும் தலைப்பை படித்ததிலிருந்து, எங்கேயோ கேட்ட பாடலொன்றை நாள் முழுதும் முணுமுணுத்துக்கொண்டே இருப்பதைப்போல, அவ்வப்போது தட்டான்கள் எனை சுற்றி பறந்தபடியே இருக்கின்றன. மறைகின்றன. மேலும் இக்கவிதையில் மணிப்புறாவின் லாவகம், காற்றில் தட்டான்கள் பற்க்கும் கோட்டோவியம், தட்டான்மாலை போன்ற வார்த்தைகள் ஏற்படுத்தும் Visualகள் அற்புதமானவை. இக்கவிதையின் நிலம் சார்ந்து பேசும் குழந்தை மென்மை என்னை வருடுகிறது.
*அன்பின் வாதையில், வெயிலைக்கண்டு குளிர் நோக்கி ஓடுவதும் குளிரைக்கண்டு வெயில் நோக்கி ஓடும் இயல்பும், நன்மையும் தீமையும் ஒன்றெனவும், சொல்லப்போனால் தீமையின் நன்மையையும் பேசும் பாங்கு. எனக்கு மிகப்பிடித்த கவிதை இது.
*சமாதானத்தூதுவர் = ஹிட்லர் படிக்கும்போது, என்றாவது ஒருநாள் உன்னதமான அரசாளுகையின் கீழ் இருப்போம் என்ற கனவு கானல் நீர்தானென்ற நிதர்சனம் உரைக்கிறது. அரசு எப்போதும் அரசு தான். நாமெல்லாம் கருவிகளே/ USSR உடஞ்சி போச்சே! உடஞ்சா உடஞ்சிட்டுப்போகுது ,ரொம்ப நல்லது/ சுயராஜ்யம் சுயராஜ்யம்னு சொல்லி சுதந்திரம் வாங்கி ’நமக்கு நாமே’ திட்ட்த்தின் மூலம் நம்ம சதையையே பிச்சு தின்கிறோம் / இங்க , தமிழ் தமிழ்னு சொல்லி ஆட்சிய பிடிச்சு தமிழ்ப்பள்ளிகூடங்களையெல்லாம் தீண்டத்தகாதவை ஆக்கிட்டோம் / ஒபாமா / ஒசாமா / சதாம் உசேன் ... அய்யையோ ஒரு கவிதை எவ்வளவு தொடர் வருத்தங்களை உண்டாக்குது. பரவாயில்ல , நல்லாயிருக்கு.
*அரசல்புரசலின் நிறம், மகாலொள்ளு. என் நண்பரொருவர் இதைப்படித்துவிட்டு இது கிரேக்க வரலாற்றை பகடி செய்யும் கவிதை என்றது அதைவிடப் பெரிய லொள்ளு. ஆனால் இந்தக்கவிதை உள்ள பக்கத்தைப் புரட்டும்போது அப்பக்கம் மட்டும் இளஞ்சிவப்பு சிவப்பாய் கண்ணைக் கவர்கிறது.
’’ *‘வேர்கொழித்து பசிய அலை வீசும் வனம்’ ஆகா.
சில விதைகளை கவ்வி வரும் பறவையின் பாடல் போதுமென்ற கவிமனத்திற்கு நான் ரசிகன்.
* சிறுமிக்கு வரிசையில் முன்னேற இடம் கொடுத்து உங்கள் கரிசனத்தை அறிய ஆவலெனக்கேட்கும் கவிதையில் மனதிற்கு மிக நெருக்கமாகிறீர்கள் தாங்கள். எல்லாருள்ளும் ஒளிந்திருக்கும் சுயவிளம்பரக்காரன், தற்புகழ்ச்சிக்காரன் எட்டிப்பார்ப்பதை எவ்வளவு நுட்பமாய் பதிவு செய்துள்ளீர்கள். அந்த சம்பவ நேரத்து கண்களையே சற்று கூச்சத்துடன் நினைவு கூர்கிறோம் நாம்.
*கபிலனும் , திலிபனும் Post Modernist என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குழந்தைகளின் கதைகளையும் அவர்கள் வரையும் கோடுகளையும் தன் நாம் மெனக்கட்டு மெனக்கட்டு மீட்டுருவாக்கம் செய்து தோற்கிறோம். அவர்கள் அனாயசமாக அதகளம் செய்கிறார்கள். உண்மையான உணர்வுகளைக் குழைத்து சரிவிகிதத்தில் வண்ணமடிக்கிறார்கள். எப்படி ? ஏனென்றால் அவர்கள் மாய எதார்த்தவாதிகள். உண்மையான Post Modernistகள்.
*அப்படித்தான் விழுகிறது. தப்பு
வி
ழு
கி

து
இசை கேட்பதுபோல் தலையை ஆட்டாமல் படித்தால் கவிதை முழுமை பெறாது. கண் அவிந்த பிச்சைக்காரனின் பாடல் இனிப்பதைப்போல் விழும் உமிகள், நுனிப்பற்களில் உப்புக்கரிக்கிறது.
*பொறுப்பான பேருந்து, உயிர் பேருந்து சித்திரம். கர்ப்பிணிக்கு தாய் பூசிவிடும் விபூதி, தாயின் கருவறைக்கதகதப்பு, சாலப்பரிந்தூட்டும் இளநீர், தேநீர் பேருந்தின் உயிர் சலசலக்கிறது.
“ நான் தான் சொன்னேனே , மிக மிகப் பொறுப்பான பேருந்து
இதுவென்று “ VOW.
*இத்தொகுப்பின் முன்பகுதியை விட பின்பகுதி மிகுந்த சுவாரஸ்யமாக உள்ளது. மோகப்பரிபூரணிகள் மற்றும் மோகினிகளால். முப்பொழுதையும் உண்டுசெரிக்கும் மோகப்பரிபூரணியின் தகிக்கும் வெம்மையின் மூலம் இத்தொகுப்பின் மொத்ததிற்குமான காதலையும் காமத்தையும் அழகியலையும் சொல்லிச்செல்கிறீர்கள். உச்சகவிதையாக இது உள்ளது.காமத்தை பேசுவதால் ஏற்படும் இயல்பான உணர்வெழுச்சியால் மட்டுமல்ல, இக்கவிதையின் படைப்பூக்கம் இன்னபிறவற்றையும் முழுமையாக்குவதால். எனவே வெம்மை தாளாமல் எல்லாரும் ஒரு சொம்பு நீரள்ளிக் குடிக்கிறோம். வாழ்க மோகபரிபூரணிகள்.
எல்லாக்கவிதைகளையும் பற்றிப் பேச வேண்டுமென அவா. நேரம்போதாமை. கழுத்து நெறிக்கும் வேலை. இயலவில்லை. ஆனாலும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நண்பர்களிடம் தங்களின் ஏதோவொரு கவிதையை பகிர்ந்துகொண்டபடியே உள்ளேன். மகிழ்ச்சி.
நம் ஆனந்த விகடனில் தேர்ந்த திரைப்படங்களைவிட , Values ஐ உள்ளீடாக்க்கொண்ட தேர்ந்த திரைப்படங்களுக்குதான் மதிப்பெண்கள் அதிகம் அளிப்பீர்கள். உதாரணமாக ஆரண்ய காண்ட்த்திற்கு 45 தான் என்றால் அங்காடித்தெருவிற்கோ, எங்கேயும் எப்போதுமிற்கோ 50 அளிப்பீர்கள். அதேபோல் இத்தொகுப்பில் உள்ள சமாதானத்தூதுவர், பிள்ளையார், லாபங்களின் ஊடுருவல், பறவையின் பாடல், காலத்தின் மீது விரையும் பொறுப்பு போன்ற கவிதைகள் அகத்தைத் தாண்டியும் பேசும் பொருட்கள் இதன் அடர்த்தியையும் முக்கியத்துவத்தையும் அதிகமாக்குகிறது.
நான், மெசியா ஒரு பெண்ணென்றே எண்ணியிருந்தேன். நீங்கள் ஆணென்று விட்டீர்கள். அதனாலென்ன, எழுதிமுடிக்கும்வரைதான் எழுத்து எழுத்தாளனுக்கு சொந்தம், அப்புறம் வாசகனுக்குத்தான் எனும் கணக்கில் மெசியாவை நான் பெண்ணென்றே கொள்கிறேன். ஆகவே நண்பா ! மெசியாவுக்கு மூன்று மச்சங்களுக்காக என் சார்பாக மெசியாவுக்கு மூன்று முத்தங்கள்.
நன்றி.