துளிர்ப்பு திகைந்தாயிற்று
15 November, 2011
விதைநெல் பிரிக்கும் இக்கோடையில் நிகழாதிருந்திருக்கலாம்
01 November, 2011
எங்களூர் பிள்ளையார்
குவித்து வைத்த ஏதோ ஒன்றென அவரைப் பார்க்கையில்
தெரிவார் பிள்ளையாரென
மினுங்கிடும் அகலின் கீற்று உறுதிப்படுத்தும்
அவரை அவர்தானென
கொங்கைகளின் கூச்சத்தையும் பூசிக்கொண்டதுபோலிருக்கும் அவர்
அப்போது ஏற்றிருக்கும் அரிதாரம்
கறுத்துப்போன முகத்தைத் தூக்கி நிறுவுவார்
தனிமையின் இருக்கையில் சீந்துவாரற்றும்
சன்னதமாடும் அப்பத்தாவும் அறியும்
இச் ஷனம்வரைக்கும் ஒன்னுமேயாகாத
ஒத்த காலைத் தூக்கி புள்ளையார் மீது
ஒண்ணுக்குப் பெய்யும் கெடா நாயை
நன்றி : அகநாழிகை (மார்ச் 2010)
29 October, 2011
திலீபன் வைத்த கொலு
தன் முதுகில் வெளிமானைச் சுமந்துகொண்டு
புல் மேயவும் தயாரென்பது போல இருக்கிறது புலி
பசுமாட்டின் நிழலில் சிங்கம் இளைப்பாறிக் கொண்டிருந்தது
கரடியும் குரங்கும் முகத்தோடு முகமுரசிக்
விளையாடும் பாவனையில் இருந்தன
காந்தியின் கையில் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு
புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்
வேட்டைக்காரன் ஒருவன்
காட்டெருமை ஒன்று தாயின் கரிசனத்தோடு
ஓநாய்க்குட்டியை நாவால் தடவிக்கொடுக்கிறது
ஆசியர் பொம்மைக்குப் பாராமுகமாய் நிற்பது
யூகேஜி போகும் கபிலனாகத்தான் இருக்க வேண்டும்
தவயோகி ஒருவர் நடனமாதரில் லயித்திருக்க
தலையை ஆட்டி ஆட்டிச் சிரிக்கிறது
தலையாட்டிப் பொம்மை
22 October, 2011
ஆனந்தியின் பொருட்டு தாழப் பறந்துகொண்டிருக்கின்றன தட்டான்கள்
30 September, 2011
கிணற்றுக்குள் தழும்பும் கேவல்
தரைதட்டுதல்
27 September, 2011
குதிரைக்குக் கொம்பு முளைக்க ஆரம்பித்துவிட்டது
13 September, 2011
இருக்கலாம்
10 September, 2011
அதுவாக இருக்கிறது அது
30 August, 2011
ஆயிற்றா?
25 August, 2011
முறுவல்
21 July, 2011
பிச்சி
13 July, 2011
தொலைதல்
28 June, 2011
பறவையின் பாடல்
13 June, 2011
உயரம்
08 June, 2011
மகரந்த அலை
12 May, 2011
புத்தனின் கனவு
03 May, 2011
நெடுஞ்சாலை மிருகம்
14 April, 2011
எலி
நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]
05 April, 2011
ஆலகாலம்
29 March, 2011
1
முன்மாலைக்கும்
பின்மாலைக்கும் இடையே
மிதவேகத்தில் செல்கிற ரயில்
ஒரு புள்ளியாகி மறைகிறது அந்திச் சிவப்பில்
பிள்ளைக்குப் பாலூட்டும் ஏக்கத்தில்
பயணிக்கிற
அவளின் முலைகளை
தாலாட்டி தாலாட்டி
2
நிச்சலனமுற்று
இருந்த தெப்பக்குளத்தில்
கொத்துக்கொத்தாய்
பார்வைகளை அள்ளி
வீசிவிட்டு வந்துவிட்டாள்
சலனமுற்ற மீன்களில் சில
நீந்திக்கொண்டிருக்கின்றன
அவனது ஈசான மூலையில்
3
இரவு தளும்பிக்கொண்டு
இருக்கிற குளத்தில்
நெளிந்துகொண்டு
இருக்கிற பௌர்ணமியை
கொத்தும் கொக்கு
றெக்கை விரிக்க
நிலவு பறக்கிறது
நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011
19 March, 2011
ஒலி விளையாட்டு
10 March, 2011
இருள்தான் எரிந்துகொண்டிருந்தது
இருள்தான் எரிந்துகொண்டிருந்தது
ஒளி வருவது புலனானதே இருளால்தான்
ஒளி வேட்டை மிருகத்தின் சாயலில்
இருளைக் கடித்துத் தின்னத் தொடங்கியபோது
கருப்பாய்ச் சொட்டிக்கொண்டிருக்கும்
இருளின் ரத்தத்தை உறிஞ்சுகிறது அதன் திரி
இருளிலிருந்து உயிர்கொண்ட ஒளியிலிருந்து
தன் புன்னைகையைச் சரிசெய்கிறான் சிவன்
பின்பு சிவனே இருளாகி அவனே ஒளியாகிறான்