16 January, 2010

ருது

உயிர்ப்பிடித்தெழும் நாட்களின் பிடரி பற்றி
உலுக்கிஎடுப்பதற்கெனவே
ஊட்டி வளர்த்தனுப்புகிறாய்
ருதுவான சொற்களை

விடைத்தலையும் பருவத்தை
செரித்துத் தீர்க்கவே
பசிவிரித்து தவம் கொள்கிறததன்
பிரவேசப் பாய்ச்சல்

ஏறி இறங்கும் ஏக்கப் பெருமுச்சுகளில்
திய்ந்தழிகின்றன அவை உமிழ்ந்துவிட்டுப்போன
கனவுபிம்பங்கள்

அஹிம்சைபுனைந்த அதன்
அர்த்த மையத்திலிருந்து
வெடித்துப்பரவும் சாத்தியக்கூறுளோடு
கனன்றுகொண்டிருக்கும் வன்முறையில்
உன்னழகின் உக்கிரம்

வெள்ளாமையின் கழுத்தறுக்க
கருக்கேந்தி நகரும் அதன் கரத்தில்
உனக்கெழுதிய கவிதையை
ஒப்படைத்ததால் தப்பித்தது காலம்

சொற்களை மனனிப்பதிலேயே
கழிகிறது வாழ்வு


No comments: