16 December, 2009

ஆதவன் ஒளி புகத் தயங்கும்
ஆழ்கடல் மவ்னத்தை
நிராகரிப்பின் இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு
அடைத்து வைத்திருக்கிறாய்
உன் மனவறையில்
கணங்கள் கெட்டிப்படும்
அதன் வாயிலில் சூசகமாய்
தூவிவிட்டு வந்திருக்கிறேன்
சொற்களின் விதைகளை
கதவிடுக்கில் கசிந்து பரவும்
ஈரத்தின் தாய்மையில்
வேர்க்கிளைத்துவிடாதா
நமக்கான மொழி

No comments: