எம்.ஜி.கன்னியப்பன் |
22 October, 2024
அஞ்சலி : எழுத்தாளர் எம்.ஜி.கன்னியப்பன்... உங்கள் வண்டி கிளம்பிவிட்டது!
21 October, 2024
சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது_2013
மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் - கவிதைப் புத்தகத்துக்கு ’’சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருது- 2013” வழங்குகிறார் சாகித்ய அகாதெமியின் பிரசிடெண்ட் விஷ்ணு பிரசாத் திவாரி. இடம் : சங்கீத நாடக அகாடெமி- ஜோத்பூர் -ராஜஸ்தான் மாநிலம். தேதி : 05.02.2014 நேரம்: மாலை 5.30 க்கு மேல்..
கவிதை~ ஒரு என்பது எல்லாம்~ எனது கவிதையும் Sivakumar Ambalapuzha_ன் மலையாள மொழிபெயர்ப்பும்
மாட்டுவண்டி செல்கிறது. இல்லை வண்டிப்பாதை அழைத்துப்போகிறது. இல்லை காளைகள் இழுத்துப்போகின்றன. இல்லை சக்கரங்கள் நகர்த்திப்போகின்றன. இல்லை தெப்பக்கட்டை தாங்கிப்போகிறது. இல்லை அரிக்கேன் வெளிச்சம் வழிகாட்டுகிறது இல்லை எட்டுக்கால்கள் இரண்டு சக்கரங்கள் சேர்ந்துபோகின்றன. இல்லை கழுத்துமணிச் சத்தம் கூட்டிப்போகிறது. இல்லை சத்தியம் முன்போகிறது. வண்டி பின்போகிறது ஒரு வண்டிக்காரன் உறங்குகிறான் இவை எல்லாவற்றின் மடியில்.
கவிதை : கதிர்பாரதி ~ குடலைமட்டை நத்தை ~
11 October, 2024
10 October, 2024
கவிதை : கதிர்பாரதி ~ பேசு பேசு ¬ உயர்திணைப் பறவை
09 October, 2024
~ கவிதை : கதிர்பாரதி ~ மேரிகோல்டு உண்ணும் ஸ்ரீயானை
08 October, 2024
~கவிதை : கதிர்பாரதி ~ சாந்தசொரூபிகளின் தெய்வம்
எனக்குள்ளிருக்கும் நாயை அவிழ்த்து
கையில்
பிடித்தபடி காலைநடை போனேன்.
நானொரு
நல்ல ஜீவகாருண்யன்
நாயோ சாந்தசொரூபிகளின்
தெய்வம்.
அதன்
விடிகாலைக் காதுகளில்
`மாதா உன்
கோயிலில் மணி
தீபம் ஏற்றினேன்`
பாடலைச் செருகிவிட்டிருந்தேன்.
அப்போததன் வால்கூடச் சாந்தமாகவே குழைந்தது.
வீட்டுத்
திருப்பம் மறைந்ததும்
`மாதா`வைக் கழற்றிப் போட்டுவிட்டு
தெருவோரங்களை மோந்து மோந்து பார்த்தது.
திரைப்படச்
சுவரொட்டியைக் கண்டதும்
கால்
தூக்கி சிறுநீர் கழித்தது.
`நாக்கை
அப்படித் தொங்கப்போடாதே
அதிலிருப்பவர்கள்
அதிரூபங்கள்.
அவர்கள்முன்
கால்தூக்குவது நாகரிகமல்ல` என்றேன்.
`எனக்கு எல்லாம் தெரியும்… மூடு` என்று
முகத்தை
வைத்துக்கொண்டது.
இன்னொரு
திடீர் வளைவில்
என்போல
எல்லோரும்
அவரவர்
மிருகத்தைக் கையில் பிடித்தபடி
காலைநடை
வந்திருந்தனர்.
நாயின் கால் நாயறிந்து, எனைக் கழற்றிவிட்டு
நடையும்
துறைந்துவிட்டு
இன்னொரு
நாயை இழுத்துக்கொண்டு
முட்டைபோண்டா
சுவைக்கப் போய்விட்டது.
பூங்காவில்
ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு
பெண்நாய்களின்
பின்புறங்களைக் கவனித்தது.
`அடச் சீ
நீயொரு நாயா?` எனக் கடிந்து
வீட்டுக்கு
அழைத்துவந்துவிட்டேன்.
நாயும் முகத்தில் சாந்தத்தை
அழைத்துவந்துவிட்டது.
வீட்டு எஜமானி தேநீர் கொடுத்தாள்
`அருகன்
சாறு அருந்தினேன் அம்மா` என்று
வாலைக்
குழைத்துவிட்டு
காதுகளில்
மறுபடியும்
`மாதா`வை மாட்டிக்கொண்டது.
நாயைக்
காலைநடை கூட்டிப்போனால்
நமக்குத்தான்
ரத்தத்தில் சர்க்கரை
தாறுமாறாய்க்
கூடிவிடுகிறது.
_கதிர்பாரதி