13 June, 2025

அஞ்சலி : கவிஞர் ஜெயதேவன்...


விஞர் ஜெயதேவன் மரணம் அடைந்தது வருத்தமளிக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் பணிப் பங்களிப்பு செய்தவர். ஆனந்த விகடனில் நான் வேலைக்குச் சேர்வதற்கு முன்பு அங்கிருந்து விலகிவிட்ட பத்திரிகையாளரும்கூட.

இளவரசன்(திவ்யா)மரணம் சம்பந்தமாக ஆனந்த் விகடனில் நான் எழுதிய "அது எது?" என்கிற தலைப்பிலான கவிதையைப் படித்துவிட்டு முதன்முதலாக என்னோடு பேசினார். அப்போதே அவர் 70 வயதை நெருங்கியிருந்தார். ஆனாலும் வார்த்தைகளில் மரியாதை தோழமை அன்பு எல்லாம் வெளிப்பட பேச ஆரம்பித்தவர், பிறகு நெருங்கிய உறவினர்போல மாறிவிட்டவர்.
எனது "அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது" கவிதைப் புத்தகத்து முதல் மதிப்புரை எழுதியவர் கவிஞர் ஜெயதேவன். கடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில், அவரது மதிப்புரை என் புத்தகத்துக்கு வாசகத் தொடக்கமாக இருந்தது. அவரது மதிப்புரையைத் தொற்றித்தொடர்ந்து நிறைய விமர்சனங்களும் மதிப்புரை வார்த்தைகளும் வர ஆரம்பித்தன. அப்படி நிறைய ஆதுரமான அன்பான வார்த்தைகளைப் பழகிய தோழர்களோடு பகிர்ந்துகொண்டவர். தனக்குச் சரியென பட்ட வார்த்தைகளை அழுத்தமாக இதமாக உரையாடத் தெரிந்த பண்பாளர். இவ்வளவு சீக்கிரமாக சுமையான நினைவுகளாகிவிடுவார் என நினைக்கவில்லை.
மரணம் என்பது முட்டாள்போல பாசாங்குசெய்யும் புத்திசாலி. ஆனால், ஒருபோதும் அது புத்திசாலித்தனமாக நடந்துகொண்டதே இல்லை. அஞ்சலிகள்!!!

No comments: