வாழ்நாள் முழுக்க சமூகத்தால், சக உறவுகளால், சமூக மதிப்பீடுகளால் தோற்கடிக்கப்படும் எஸ்தர்.... அவளை எழுதிய தஞ்சை ப்ரகாஷின் குறுநாவல் `மிஷன் தெரு`.
![]() |
| தஞ்சை ப்ரகாஷ் |
வாழ்நாள் முழுக்க சமூகத்தால், சக உறவுகளால், சமூக மதிப்பீடுகளால் தோற்கடிக்கப்படும் எஸ்தர்.... அவளை எழுதிய தஞ்சை ப்ரகாஷின் குறுநாவல் `மிஷன் தெரு`.
![]() |
| தஞ்சை ப்ரகாஷ் |
கிறிஸ்துமஸ் விடுமுறை உழவன் விரைவு வண்டி சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு 7மணி நேரம் வேக மூச்செடுத்து ஓடிவந்து 2_வது நடைமேடையில் விடிகாலை 05:20 மணியில் நின்று ஓய்ந்துவிட்டது.
அதன் வயிற்றுக்குட்டியாகதலைமைச் செயலகம்` - எழுத்தாளர் சுஜாதா, மனித மூளையின் தொழில்நுட்பம், வலிமை, விஸ்தாரம் மற்றும் பராக்கிரமம் பற்றியெல்லாம் ஜூ.வி-யில் எழுதி மிகவும் வெற்றியடைந்த கட்டுரைத் தொடர். நான் சொல்லப்போவது அதைப் பற்றியல்ல... இயக்குநர் ஜி.வசந்தபாலன் எழுதி இயக்கி, வெற்றியடைந்திருக்கும் அரசியல் சதுரங்க வெப்சீரிஸ், "தலைமைச் செயலகம்" பற்றி. ZEE5-ல் வெளியாகியிருக்கிறது.
![]() |
| இயக்குநர் வசந்தபாலன் |
நான் படித்த கவிஞர் வைரமுத்துவின் முதல் புத்தகம், கவிதைப் புத்தகம் அல்ல. அவரது பேட்டிகளின் தொகுப்பு... 'கேள்விகளால் ஒரு வேள்வி'. அப்போது நான் திருச்சி செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன். அவரது புகழ்பெற்ற முதல் பாடலான பொன்மாலைப் பொழுது பாடலில் 'கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்' என்று ஒரு வரி வரும். அதேயே அவரது பேட்டிகள் தொகுப்புக்கு தலைப்பாக வைத்திருப்பார்.
![]() |
| வைரமுத்து |
திருநீற்றுப் புதனோடு கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பமாகிவிட்டது. அதுமுதல் 40 நாட்கள் இறைமையோடு ஒன்றித்திருக்கும் ஒருத்தல் முயற்சியாக தியானம், வழிபாடு, விரதம், சுத்தபோஜனம், இறைச் சொற்பொழிவு, கூட்டுவழிப்பாடு... என இன்னும் சில வழிமுறைகளை வழிபாடுகளாக முன்மொழிகிறது கிறிஸ்தவம். அதாவது ஈஸ்டர் வரை.
அசதா சார் எனக்கு எப்போதும் இனியர். அவரை நினைகும்தோறும் நிதானம் + அமைதிகூடிய ஓர் அண்ணன் சித்திரம் மனத்தில் தோன்றும். நேரில் பார்க்கும்போது அவர் அருகில் போய் மௌனமாக நின்றுகொள்ளத் தோன்றும்; நின்றிருக்கிறேன்.
![]() |
| எழுத்தாளர் அசதா |
![]() |
| சேலம் ராஜா |
அம்மா சிறுமி - கதிர்பாரதி
**
மகளுக்குக்
காத்திருக்கும் வேளை.
பள்ளி மைதானத்தில்
ஊஞ்சலாடுகிறாள்
அம்மா.
முன்னேறும்போது
சிறுமி.
பின்னேறும்போது
அம்மா.
முன்னேறி ஒருமுறை
வானம் உதைத்தவள்
மகள் கண்டதும்
பின்னேறி
வந்து
பூமியில்
நின்றுகொண்டாள்.