05 March, 2012

காலாதிபதி

என் மிதவையை யாரோ தொந்தரவு செய்கிறார்கள்.
மேல்நோக்கி எழும்பும் அதன் ஆன்மவேட்கை

அமிழ்த்தி ஆழத்தில் வைக்கவும் 
யத்தனம் நடக்கிறது.

அலைகளின் இயல்புக்கேற்ப
இறந்தகாலத்தில் தாழ்ந்து எதிர்காலத்தில் உயர்ந்து
நிகழ்காலத்தில் மிதப்பதை பகடி செய்வதாக
தங்கள் பதட்டத்தை மறைக்கப் பார்க்கிறார்கள்.
கிலி ஏற்படத்தான் செய்யும்.
அடிவயிற்றில் கார்காலத்தை அடைக்காக்கும்
முதுகுபுறத்தில் வெயில் சுமக்கும் அதன்மேல்
குறுக்குவாட்டாய்க் கிடப்பேன் எப்போதும்
காலாதிபதியாய்


1 comment:

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html