ஒளியின் வழித்தடம் அழிக்கப்பட்டு
இருளுறைநிலையில்
ஜன்னல் தாழிடப்பட்ட அவனதறை
ஒன்றுமில்லையென
இயல்பாய் இருக்கிறாள் மனைவி
இயல்பு திரிந்து தேம்புகிறது
அவனுலகம்
நன்றி: கல்கி (28.02.10)
30 January, 2010
22 January, 2010
நனைதல்
தமது செல்ல பாலகனை
உறக்கத்தில் ஆழ்த்தும்பொருட்டு
அப்பா சொன்ன கதையிலிருந்து
உயிர்கொண்ட ஸர்ப்பம்
புற்று ஒன்றை நிர்மாணிக்க
உறங்கிப்போகிற மகனால்
நனைகிறது அப்பாவின் பால்யம்
உறக்கத்தில் ஆழ்த்தும்பொருட்டு
அப்பா சொன்ன கதையிலிருந்து
உயிர்கொண்ட ஸர்ப்பம்
புற்று ஒன்றை நிர்மாணிக்க
உறங்கிப்போகிற மகனால்
நனைகிறது அப்பாவின் பால்யம்
நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]
20 January, 2010
பெரு மழை
உள்ளாடையின் அந்தரங்கம்
சொட்டச்சொட்ட நனைய
அவர்கள் ஆடித்தீர்த்த பெருமழையில்
கிளர்ச்சியுற்று
முளைகொண்ட மாஞ்செடியின்
முதல் காயைக் கொய்கையில்
அவளுக்கு மேலதிகமாக சுரக்கின்றன
மார்புகள்
நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]
19 January, 2010
பச்சைய பருவம்
நீதான் வழிநடத்திப் போகிறாய்
மறியின் பச்சைய கனவுகளை
முடித்துவைக்கும் மேய்ப்பனைப் போல
எலிகளின் தானிய சபலத்தை
நிவர்த்திக்கும் கழனிகளைப் போல
உன்னை மையமாக்கி
சுழல்கிறதென் உலகம்
உனது கோபுரங்களில் குடியிருக்கும்
ஆசையின் கனவுக் கண்களை
உனது சுனைகளில் நீராட்டிச் சிவக்கவிடுவாயா
காதுகளை உரசித் தொங்கும்
நேர்த்திக் கடனென
காமத்தின் பக்கவாட்டில் ஆடுகின்றன
கொங்கைகளின் மீதான வேட்கை
ஒரு வட்டக் கிணறு போல
குறு அலைபரப்பும் உன் பருவத்தை
நம்பியிருக்கிறது அதன் புன்செய்நிலம்
மறியின் பச்சைய கனவுகளை
முடித்துவைக்கும் மேய்ப்பனைப் போல
எலிகளின் தானிய சபலத்தை
நிவர்த்திக்கும் கழனிகளைப் போல
உன்னை மையமாக்கி
சுழல்கிறதென் உலகம்
உனது கோபுரங்களில் குடியிருக்கும்
ஆசையின் கனவுக் கண்களை
உனது சுனைகளில் நீராட்டிச் சிவக்கவிடுவாயா
காதுகளை உரசித் தொங்கும்
நேர்த்திக் கடனென
காமத்தின் பக்கவாட்டில் ஆடுகின்றன
கொங்கைகளின் மீதான வேட்கை
ஒரு வட்டக் கிணறு போல
குறு அலைபரப்பும் உன் பருவத்தை
நம்பியிருக்கிறது அதன் புன்செய்நிலம்
நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]
ப்ரியமான உப்பு
எதிர்பார்ப்பு
-விலக்கான நாட்களின் ஈர நசநசப்புக்கு
ஒப்பாய் எரிச்சலூற்றி இருக்கும்
கனவு
-மழலை ஈன்றவளின் பாலூட்டும் ஏக்கம்
அலுவலகக் கழிப்பறையில் பீய்ச்சப்படுதலாய்
துயருறுத்தி இருக்கும்
வார்த்தைகள்
-பிரசவிக்க இயலாது வயிற்றுப் பிள்ளையோடு
மரித்துப்போன தாயின் இயலாமையை
விதைத்திருக்கும்
முன்முடிவுகள்
-திரும்பிப் படுத்துறங்கும் உன்னை
வன்மையாய்த் திருப்பி உன்னனுமதியின்றி
புணரும் வேதனையைத் தந்திருக்கும்
ஆக்கிரமிப்பு
-பிரசவித்த வயிற்றின் கோடுகளென
வலியின் ரேகைகளை உள்ளுக்குள்
ஓடவிட்டிருக்கும்
எல்லாம் விலக்கி
ஓர் உதட்டுச் செடி முத்தப் பூவை புஷ்பிக்கிறது
ஓர் உதட்டுச் செடி கொய்கிறது
உப்பின் சுவை கூடுகிறது
18 January, 2010
துத்தா
பார்க்குமனைத்துக்கும் பார்த்தமாத்திரத்திலேயே
பெயர்சூட்டிவிடும் ஞானம் வாய்த்திருக்கிறது
ஒன்னரை வயது கபிலனுக்கு
அதற்கு முன்பிருந்த பெயர்குறித்தோ
பின்பு வரப்போகும் பெயர் பற்றியோ
அவன் கிஞ்சித்தும் கவலையுறுவதில்லை
களிகூர்ந்து அவன் சூட்டும் நாமகரணம்
ஒருபோதும் மொழியின் கூண்டுக்குள்
நிலைகொள்ளாது மேலாக
அர்த்தத்தைச் சிங்காரிக்கும்
கல்லணையை அவனுக்கு
அறிமுகப்படுத்திய கணத்தின் முடிவில்
தேங்கித் தளும்பிய புனலை
இத்தியென அள்ளியாடினான்
வீடு மீண்டதும் கல்லணையை
பக்கெட்டில் ஊற்றி அவன்
இத்தியாடுகையில் எதிர்பட்ட
எலியின் பொருட்டு
புவ்வாவென்று அலறினான்
கேட்கப்போன அப்பாவாகிய அப்பா
துத்தாவானார்
துத்தா அப்பவானால்
அப்பா என்னவாகும்
பெயர்சூட்டிவிடும் ஞானம் வாய்த்திருக்கிறது
ஒன்னரை வயது கபிலனுக்கு
அதற்கு முன்பிருந்த பெயர்குறித்தோ
பின்பு வரப்போகும் பெயர் பற்றியோ
அவன் கிஞ்சித்தும் கவலையுறுவதில்லை
களிகூர்ந்து அவன் சூட்டும் நாமகரணம்
ஒருபோதும் மொழியின் கூண்டுக்குள்
நிலைகொள்ளாது மேலாக
அர்த்தத்தைச் சிங்காரிக்கும்
கல்லணையை அவனுக்கு
அறிமுகப்படுத்திய கணத்தின் முடிவில்
தேங்கித் தளும்பிய புனலை
இத்தியென அள்ளியாடினான்
வீடு மீண்டதும் கல்லணையை
பக்கெட்டில் ஊற்றி அவன்
இத்தியாடுகையில் எதிர்பட்ட
எலியின் பொருட்டு
புவ்வாவென்று அலறினான்
கேட்கப்போன அப்பாவாகிய அப்பா
துத்தாவானார்
துத்தா அப்பவானால்
அப்பா என்னவாகும்
நன்றி: கல்கி (28.02.10)
16 January, 2010
ருது
உயிர்ப்பிடித்தெழும் நாட்களின் பிடரி பற்றி
உலுக்கிஎடுப்பதற்கெனவே
ஊட்டி வளர்த்தனுப்புகிறாய்
ருதுவான சொற்களை
விடைத்தலையும் பருவத்தை
செரித்துத் தீர்க்கவே
பசிவிரித்து தவம் கொள்கிறததன்
பிரவேசப் பாய்ச்சல்
ஏறி இறங்கும் ஏக்கப் பெருமுச்சுகளில்
திய்ந்தழிகின்றன அவை உமிழ்ந்துவிட்டுப்போன
கனவுபிம்பங்கள்
அஹிம்சைபுனைந்த அதன்
அர்த்த மையத்திலிருந்து
வெடித்துப்பரவும் சாத்தியக்கூறுளோடு
கனன்றுகொண்டிருக்கும் வன்முறையில்
உன்னழகின் உக்கிரம்
வெள்ளாமையின் கழுத்தறுக்க
கருக்கேந்தி நகரும் அதன் கரத்தில்
உனக்கெழுதிய கவிதையை
ஒப்படைத்ததால் தப்பித்தது காலம்
சொற்களை மனனிப்பதிலேயே
கழிகிறது வாழ்வு
29 December, 2009
ததும்புகிறது @ ததும்புகிறான்
நிறைந்து ததும்புகிறதுன் யவ்வனம்
பட்டாம்பூச்சியின் மென்சிறகு
மல்லிகையின் ரம்யம்
முற்றிய நிலவின் கிரணங்கள்வரைக் கூட
நீண்டிருக்கிறது
அதன் ஆளுமையின் வசீகரம்
மல்லிகையின் ரம்யம்
முற்றிய நிலவின் கிரணங்கள்வரைக் கூட
நீண்டிருக்கிறது
அதன் ஆளுமையின் வசீகரம்
யவ்வனத்தின் கரத்திலிருக்கும் மந்திரக்கோல்
காலங்களை மெலிதாக்கி ஆசிர்வதிக்க
பருவங்கள் நிறம்கொள்ளத் துவங்குகின்றன
காலங்களை மெலிதாக்கி ஆசிர்வதிக்க
பருவங்கள் நிறம்கொள்ளத் துவங்குகின்றன
சுழித்தோடி நுரைத்துப் பொங்கும்
நதியில் எதிர்நீச்சலில்
புனல் கீறி முன்னேறும் படகுக்கு
உன் யவ்வனத்தின் பெயர் வைக்கலாம்
நதியில் எதிர்நீச்சலில்
புனல் கீறி முன்னேறும் படகுக்கு
உன் யவ்வனத்தின் பெயர் வைக்கலாம்
மலைப்பாதை வளைவுகளின்
அபாயம் குறித்து அலட்டிக்கொள்ளாத
யாத்ரீகனின் மோனத்துக்குத் தள்ளும்
அதன் லாகவம் நகர்த்துகிறதவனை
பூக்களாகவும் தற்கொலைமுனையாகவும்
இருக்கும் உச்சம் நோக்கி
அபாயம் குறித்து அலட்டிக்கொள்ளாத
யாத்ரீகனின் மோனத்துக்குத் தள்ளும்
அதன் லாகவம் நகர்த்துகிறதவனை
பூக்களாகவும் தற்கொலைமுனையாகவும்
இருக்கும் உச்சம் நோக்கி
-அகநாழிகை
குளம்
புணர்ச்சிக்குப் பரிச்சயமான யோனியை
மிருதுவாய் மலர்த்தி
அதிரப் புணர்கையில்
மேலெழும்பி மிதக்கும் இசையை
ஒத்திருக்கிறது
தவளைகள் தத்தித்தத்திச் செல்ல
ஒலிஎழும்பி அலைமோதும்
மாரிக்கால குளம்
மிருதுவாய் மலர்த்தி
அதிரப் புணர்கையில்
மேலெழும்பி மிதக்கும் இசையை
ஒத்திருக்கிறது
தவளைகள் தத்தித்தத்திச் செல்ல
ஒலிஎழும்பி அலைமோதும்
மாரிக்கால குளம்
Subscribe to:
Posts (Atom)