07 September, 2026

எனது 5வது கவிதைத் தொகுப்பு "பதினான்காம் சகாயராணி" புத்தகத்துக்கு படைப்பு இலக்கிய விருது 2026

 நண்பர்களுக்கு வணக்கம்...

எனது 5வது கவிதைத் தொகுப்பு "பதினான்காம் சகாயராணி"
படைப்பு இலக்கிய விருது 2026 க்கு தேர்வாகி இருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறேன். கவிஞர் றாம் சந்தோஷ், கவிஞர் வலங்கைமான் நூர்தீன் ஆகியோரின் கவிதைத் தொகுப்புகளும் விருதுக்கு உரியனவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.
"பதினான்காம் சகாயராணி" கவிதைத் தொகுப்பைப் பதிப்பித்த களம் புதிது பதிப்பகத்துக்கும் பதிப்பாளர் அண்ணன் கரிகாலன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி. படைப்பு குழுமத்துக்கு எனது அன்பு.
பதினான்காம் சகாயராணி புத்தகத்தை வாங்கிப் படிக்க விரும்பும் நண்பர்கள்... களம் புதிது பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் பாரதி ஆர் அவர்களை இந்த எண்ணில் 9092097915 தொடர்புகொள்ளலாம்!




``மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்`` கவிதைத் தொகுப்புக்காக
``சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது 2013`` பெறுதல்!

No comments: