கவிஞன்
#
எனது நிலம் தழைக்க அதில் ஆறுகள் ஓடின.
குளங்களில் தாமரைகள் மலர்ந்தன. அழகிய மங்கைகளதில் நீராடினர்.குளத்தின் கரையில் தெய்வங்கள் ஆளும் ஆலயங்கள் இருந்தன.
மந்தை கிளப்பிய மஞ்சளந்திப் புழுதியின் பின்னணியில் சித்திரம்போல எங்கள்
அஞ்சலைகள் மறியோட்டி வீடேகினர்.
எல்லாம் ஞாபங்களாக இன்றோ எங்கள் மருதத்தின் திணைகளை தார்ச்சாலைகளும் கேபிள்களும் சுரங்கங்களும் அழித்து விட்டன.
சொந்தங்களின் உடல்கள் கனிந்து தொங்கின. எங்கள் வாழ்வில் கண்ணீர்த் துளி சொட்டி சொட்டி உப்பு கறிக்கத் தொடங்கின.
காதலும் வீரமும் ஈரமும் இரக்கமும்
நிறைந்த நிலம் இன்று ஒரு வணிக வளாகம்
போலாகி விட்டது.
தெய்வம் கைவிட்ட நிலத்திலிருந்து கவிஞனொருவன் நாடோடியைப் போல தன் புல்லாங்குழலை இசைத்தபடி சென்று கொண்டிருக்கிறான். அவனை உற்று கவனிக்கிறேன்.
என் தம்பி Kathir Bharathiயேதான் அது.
அவன் பாடல் பெண்களை.. நிலத்தை.. விடுதலையைப் போற்றி காற்றில் பரவிக்கொண்டிருக்கிறது!
அவன் பாடல் பெண்களை.. நிலத்தை.. விடுதலையைப் போற்றி காற்றில் பரவிக்கொண்டிருக்கிறது!
#ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்