27 September, 2011

குதிரைக்குக் கொம்பு முளைக்க ஆரம்பித்துவிட்டது

இரண்டு வயது நிரம்பி
வழிந்துவிடத் துடிக்கும்
அந்தச் சின்னஞ்சிறு சிறுவனின்
கண்களிலிருந்து கண்ணீர்
வழிந்துவிடத் துடித்து
கடைசியில் புகாராக
மாறிவிடுகிறது அப்பாவிடம்

அண்ணன்
தன் குதிரை பொம்மை கொண்டு
உதைத்துவிட்டதைச்
சொல்லத் தெரியாது
திணறலோடு இறுதியில் சொல்லிவிடுறான்
மாடு முட்டிவிட்டதாக

குற்ற உணர்ச்சியில்
குதிரைக்குக் கொம்பு முளைக்க
ஆரம்பித்துவிட்டது

4 comments:

rvelkannan said...

அருமை கதிர். குதிரைக்கு கொம்பு முளைத்த கதை இதுவென்றால் உண்மையில் குதிரை பாவம் தான்

க ரா said...

யம்மா சான்சே இல்லை... அருமையா இருக்கு கதிர்பாரதி சார்...

ராமலக்ஷ்மி said...

மிக அருமை:)!

MRK said...

யோசனை மிக அருமை - MRK