20 September, 2024

விமர்சனம் / கணப்பிறை / கட்டுரைகள் / ந.பெரியசாமி - கதிர்பாரதி

வந்து சேர்ந்த மறுநாள் வாசித்துவிட்டேன் பெருசு Periyasamy Periyasamynatarajan. சக படைப்பாளிகளை எவ்வளவு பொறுப்போடு கவனப்படுத்தி எழுதியிருக்கிறீர்கள் என வியப்போடும் படித்துக்கொண்டே வந்தேன். பெரும்பாலும் கவிதைத் தொகுப்புக்கான எதிர்வினைகள். "நானொன்றும் படிக்காமல் இல்லை. இவையெல்லாம் என்னைச் சீண்டின அல்லது என்னால் சீண்டிப்பார்க்கப் பார்க்கப்பட்டவை" என அறிவிக்கும்படியான கட்டுரைகள். ஒரு கவிஞன் சக கவிஞன் குறித்து என்னவாக இருக்கிறான் என்பதற்கான திறப்புக் குறிப்புகள் இந்தக் கட்டுரைகள் என என் முதற்பார்வையாகச் சொல்லலாம். புத்தகம் வாசித்துவிட்டு அவை குறித்த நீண்ட இறுகிய மவ்னம் கெட்டித்திருக்கும் சூழலில், சுவர் குடைந்து ஜன்னல் திறந்தாற்போல் உள்ளது உங்கள் வாசிப்பு பெருசு.

இதைத்தான் மிசேல் பூக்கோ சொல்கிறான்... "காலத்தின் நீண்டநாள் சுவரில் ஒரு ஜன்னலைத் திறப்பதே என் வேலை". உங்கள் ஜன்னல் வழியாக ஓர் அதிகாலைப் பிறையைப் பார்த்துவிட்டேன் நண்பா.



No comments: