20 September, 2024

அறிமுகக் குறிப்பு ~ உயர்திணைப் பறவை கவிதைத் தொகுப்பு ~ கவிஞர் தண்டபாணி தென்றல்

 கவிதைக்கு நிறைய வரையறைகள் உள்ளன. அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறும் கவிதை குறித்து ஒவ்வொருவரின் பார்வைக்கு ஏற்றவாறும் வெவ்வேறு தன்மையில் கவிதைகளை அணுகலாம் என்று கூறிக் கொண்டாலும் இறுதியில் ஒட்டுமொத்த கவிதையும் அதன் வெளிப்பாட்டுத் திறனில்தான் வந்து நிற்கிறது. நன்கு தெரிந்த கண்ணில் எத்தனையோ முறை தென்பட்ட ஒரு விஷயத்தைக்கூட முற்றிலும் மாறுபட்ட பார்வைக் கோணத்தில் எழுதும்போது அது அப்படியே மனதில் பதிந்து நிற்கிறது.

சாம்பிளுக்கு ஒன்று:

பூஜ்ஜியத்தில் இருந்து
ஏறுவதாக நினைக்கும் எண்கள் உண்மையில் பூஜ்ஜியத்தை இழக்கின்றன.
வேறு எங்கேயும் சந்திப்பதில்லை.
இறங்கிவந்தால் அடைவதும்
முன்பு ஏறிப்போன பூஜ்ஜியம் அல்ல. தனது பூஜ்ஜியத்துக்குள் சுற்றிக்கொண்டே
சூரியனை நகர்த்துகிறது கடிகாரம்.

~கதிர்பாரதி

/இன்னும் சில பக்கங்கள் உள்ளன.
விரைவில் விரிவான பதிவு.

No comments: