26 September, 2024

மறுவாசிப்பு ~ பாரபாஸ் ~ மொழிபெயர்ப்பு நாவன் ~ மொ-ர் : கநாசு (24செப்2023 அன்று எழுதியது)

திருநீற்றுப் புதனோடு கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பமாகிவிட்டது. அதுமுதல் 40 நாட்கள் இறைமையோடு ஒன்றித்திருக்கும் ஒருத்தல் முயற்சியாக தியானம், வழிபாடு, விரதம், சுத்தபோஜனம், இறைச் சொற்பொழிவு, கூட்டுவழிப்பாடு... என இன்னும் சில வழிமுறைகளை வழிபாடுகளாக முன்மொழிகிறது கிறிஸ்தவம். அதாவது ஈஸ்டர் வரை.

யேசுவை சிலுவையில் அறையும்போது பாரபாஸ் என்கிற திருடனை சிலுவைச் சாவில் இருந்து விடுவித்தார்கள். இது ஒரு வழமையான யூத பாஸ்கா சடங்குதான். பாரபாஸை விடுவித்த இடத்தில்தான் யேசுவை சிலுவையில் அறைந்தார்கள் யூத மூப்பர்கள், மறையோர்கள், சதுசேயர்கள்.
தன்னைப் பலிக்குக் கையளித்துவிட்டு சாகும்போதுகூட ஒரு திருடன் மனதை உயிர்ப்பித்துவிட்டு போனது அந்தத் தேவ ஆட்டுக்குட்டி. பாரபாஸ் பார்வையில் மனவோட்டத்தில் கல்வாரி பலிநாளை பார்க்கும் ஏற்பாடாக 'பாரபாஸ்' நாவலை எழுதியிருக்கிறார் ஸ்வீடிஸ் எழுத்தாளர் பேர்லாகர் குவிஸ்ட். தமிழில் க.நா.சு. 1951_ம் ஆண்டு நோபல் பரிசுப்பெற்ற நாவல். நேரடி தமிழ் நாவல்போல தமிழ்ச் சூழலில் கலந்துவிட்ட புகழ்பெற்ற நாவல்.
தவக்காலத்தில் எனக்குத் தெரிந்தவகையில் மன ஒருத்தல் முயற்சியாக "பாரபாஸ்" நாவலை மறுவாசிப்பு செய்ய ஆரம்பித்துவிட்டேன். முதல் வாசிப்பில் கை நிறைய அர்த்தமுள்ள வெறுமையைத் தந்த இந்த நாவல் மறுவாசிப்பில் என்ன தரக் காத்திருக்கிறதோ....

No comments: