20 June, 2016

நூல் திறனாய்வு.............. ஆதிநிலத்தின் கலக விதை -இரா. காமராசு


  புத்தாயிரத்தின் தமிழ்க் கவிதை நவீன எழுத்தின் பேரெழுச்சியை அடையாளம் சுட்டி நிற்கின்றது. சொல்வதும், சொல்லப்படுவதும் நேற்றிலிருந்து விலகி நாளைக்கான நகர;வாய் மாறியிருக்கிறது.  சோம்பல் முறிப்புச் சுகங்களைத்தாண்டி, முதல் இரைதேடி அடியெடுத்துவைக்கும் சிட்டுக்குருவிக் குஞ்சாய் நவகவிகளின் தேடல். பு+மிக்கு மேலே இறகு கட்டிப் பறந்தாலும் கிளைக்குத் திரும்பி இலை கொத்தி உறவு+ற்றில் நாநனைத்து கூட்டுக்குள் இரவை இரசிக்கும் குதூகலம்தான் வாழ்க்கை. விட்டேத்தி என்பது விலக்குதான்.  விதிகள் மீறப்படலாம். விலக்குகள் மட்டுமே விதிகளாகாதுதானே?  ஒரு மொழியின் பாய்ச்சல் கவிதைகளிலேயே சாத்தியம்.  ஆதிக்கிழமானத் தமிழை பச்சிளம் பருவத்தில் இருத்தியிருப்பதும் கவிதைதான் எனில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  இன்றைய வாழ்வின் பிழிவை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒரு கலைடாஸ்கோப் போல கவிதைகளில் பந்திவைக்க இளம்கவிஞர;களால் சாத்தியமாகியிருக்கிறது.  விதையும் வேருமற்ற தாவரப் பெருக்கு நிரம்பியச்சூழலில் நிலத்தின் நிறமும் நீh;மையுமறிந்து வேர;பதிக்கும் படைப்பு முயற்சிகள் நம்பிக்கையளிக்கின்றன.

‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ கவிதைத்தொகுப்பின் வழி இளைஞர;களுக்கான சாகித்திய அகாதெமி விருதுபெற்று, கவனம் பெற்ற கதிர;பாரதியின் புதிய கவிதைத் தொகுப்பு-  ‘ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்’. கதிர;பாரதி தனக்கெனத் தனித்துவமானதொரு கவிமொழி கைவரப்பெற்றிருக்கிறார;. முதல், கரு, உரி என்ற முப்பொருள் ஆட்சியில் முகிழ்க்கும் சங்கக் கவிதைகளின் நீட்சியை இவரிடம் காணமுடிகிறது.  நிலமும், பொழுதும் மாறி மாறி கவிதைகளில் நிலைகொள்கின்றன.  பு+க்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், மனிதர;கள், ஏன் கடவுளும் கூட இவர; கவிதைகளை உயிர;ப்பிக்கின்றனர;.  தேவனும் காளியும் தொன்மங்களாகி நிற்கிறார;கள்,  கவித்துவம் நிரம்பி வழியும் வரிகளினூடே மிகத் தெளிவாகச் சமகால அரசியல் இழையோடுகின்றது.  ஒடுக்கத்திற்கும், ஒதுக்கத்திற்கும் எதிரான கவிக்குரல் கம்பீரமாக ஒலிக்கிறது.  உடலும், மனமும், வெளியும் பாழ்படும் துயரத்தை மிகஇலாவகமாக கவிதையாக்கிவிடுகிறார;.  வெளிப்படையாக நேர;படப்பேசும் தொனியைத் தவிர;த்து கவித்துவ ஆழத்தில் சிறு கங்கென தன் பார;வையை வைத்திடும் நேர;த்தி கதிர;பாரதியின் கவிதை இயல்பாக அமைகின்றது.  மரபுக்கும் நவீனத்துக்கும், கிராமத்துக்கும் நகரத்துக்கும், ஏழ்மைக்கும் செழுமைக்கும் இடையே பயணிக்கும் ‘நடுத்தர’ வாழ்வு இவர; கவிதைகளில் காணக்கிடைக்கின்றது.  திரைச்சீலையில் வண்ணத் தூரிகைகளிலான எழிலோவியம் போல இவரின் கவிச்சொற்கள் காட்சிச் சித்திரங்களாக வாழ்வை வரைந்து செல்கின்றன.

சங்கப்பாடலுக்கு நிகராக காதலைப், பிரிவை, ஏக்கத்தை கதிர;பாரதி போகிறப் போக்கில் எழுதிச் செல்கிறார;:
என் கரம்பை நிலத்தில்
உதிர;ந்து விழுந்துவிட்ட தென்னங்குரும்பைகளைக்
கடித்துச் சதிராடுகின்றன ஜோடி அணில்கள். கலந்து சிலிரக்;கும் மணிப்புறாக்கள் எழுப்பும் கூடலொலி கோயில் மடங்களில் பட்டு எதிரொலிக்கிறது.
உளுந்தங்காய்கள் மீதமர;ந்து
வெயில் அருந்தும் தட்டான்கள்
வால்களைப்பிணைந்துகொண்டு பறக்கின்றன.
இலந்தங்கனிகளை மடிநிரம்ப
வேடுகட்டி எடுத்துப்போகும்
பருவத்துக்கு வரவிருக்கும் பாவாடைச் சிறுமிகள்
என் அந்தியில் எதிர;பட்டுக்கொண்டே இருக்கிறார;கள்.
அடைக்கலாங்குருவிகள் கொறித்து உமிழ்ந்த
நெல் உமிகளை
காற்று தன்போக்கில் அடித்துக் கொண்டுபோவதென
வார;த்தைகள் என்னைவிட்டுப் போய்விட்டன.
முந்தானையில் சும்மாடு செய்து
அடுக்கிய மண்கலயங்களில்
ஊற்றுநீர; சுமந்து போகிறாள் குடியான மங்கையொருத்தி
அதை ஒரேமடக்கில் குடித்துவிடும் அளவு தாகத்தை
உன் வரவுக்காக நீடிக்கவிடுகிறது
கரம்பையின் கோடை.
உலர;ந்த உள்ளாடையை
துணிகளுக்குள் பொதிந்து எடுத்துப்போகும்
எதிர;வீட்டுப் பருவப்பெண்ணால் நினைவு+ட்டப்படும் நீ
இன்னும் வரவேஇல்லை.
இந்தக் கோடையும் கைவிட்டுப்போய்விட்டது.
இனி கண்கள் உடைந்து
கொட்டப்போகும் பருவமழைக்குத் தப்பி
எங்கு ஓடி ஒளியும் என்னுயிர;.
மிக அழகிய ஓவியமெனக் கவிதை மனதை நிரப்புகிறது.  எளிய, விளக்கங்கள் தேவையில்லாத கவிதைதான்.  ஆனால் தஞ்சை வட்டார வேளாண் வாழ்வும், வழக்கும் புரியாமல் கவிதையை உள்வாங்க இயலாது.  கரம்பை நிலம், வேடுகட்டி, சும்மாடு, ஒரேமடக்கில், கரம்பையின் கோடை… போன்ற சொற்கள் நிலம் சார;ந்தவை.  கதிர;பாரதியின் பெரும்பாலானக் கவிதைகளில் திணைசார; வாழ்வின் கடந்து போன தருணங்களும், கலைந்து போன கனவுகளும் பதிவாகின்றன.
‘கேரட்’ என்னும் தலைப்பிலமைந்த கவிதையில் சேனம் கட்டிய குதிரை முன் தொங்கும் கேரட்டை நோக்கியபடியே ஓடுகிறது. சேனமும் கேரட்டும் எஜமானன் உருவாக்கியவை.  குதிரையின் கனவை அதன் மேலமர;ந்து செல்லும் எஜமானன் எப்படிநிறைவேற்றுவான்? இங்கு கேரட்டும், குதிரையும் குறியீடுகள்தாம்.  காலம் காலமாக எட்டாத, ஒருபோதும் சுவைக்கமுடியாத கேரட்களைக் காட்டிக்காட்டி உழைப்பை உறிஞ்சும் நம் எஜமானர;களிடம் எத்தனைக் காலம் சேனம் பு+ட்டிய குதிரைகளாக அடங்கிக் கிடப்பது? அற்புதமானக் கவிதை.
இன்னொரு கவிதையில் சமர;த்தாகக் குட்டிக்கரணம் போடுதலை குரங்குகள் வழி கதிர;பாரதி பதிவு செய்கிறார;.  வுpத்தை நிகழ்த்துகையில் குட்டிக்கரணம் போடுதல், பார;வையாளரின் கைத்தட்டலுக்கு ஏற்ப அதிக எண்ணிக்கையில் போடுதல், சுணக்கம் இல்லாமலிருத்தல், இறுதியில் தட்டேந்தி காசு பெறுதல,; திரைபடத்தில் கதாநாயகியின் கற்பைக்காத்தல், வில்லனைச சுட்டு வீழ்த்துதல், பழங்களை துப்பிவிட்டு பீட்சா பழகுதல் எனப் பலவற்றையும் சொல்கிறார;.  காடுகளில் உலாவுவதும் கிளைகளில் தொங்குவதும் இழிவாகிறது.  இறுதியில் இப்படிச் சொல்கிறார;:
“சரியான நேரத்துக்கு கூண்டுக்குள் அடைவதிலும் கூண்டையே உலகமெனக் கொண்டாடுவதிலும் இருக்கிறது குரங்காய்ப் பிறந்ததன் பயன்.”
ஒவ்வொருவர; வாழ்விலும் எத்தனைக் குரங்குகள்? ஒவ்வொருவரும் எத்தனைக் குரங்குகள்? எல்லாமே குரங்காட்டியின் குரங்குகள்தாமே? குரங்குகளை எண்ணிப் பரிதாபப்படுவதா? குரங்காட்டிகளை நினைத்து கோபப்படுவதா? குரங்கும் குரங்காட்டியும் கூடுவிட்டு கூடு மாறும் விந்தையறிந்து விசனப்படுவதா? எல்லா வாசிப்புக்கும் இடம் தருகிறது கவிதை.
சூஃபிக்களும், ஜென்களும் அஃறிணை உயிர;களைக் கொண்டே வாழ்க்கையை அலசுவார;கள்.  இவ்வகைக் குட்டிக் கதைகள் ஏராளம்.  இயேசுவின், நபிகளின் போதனைகளிலும் உயிர;களுக்கு நிரம்ப இடமுண்டு.   கதிர;பாரதி தன் கவிதைகளில் வாழ்வின் உயர; அடையாளங்களை உயிரின் வழியே உலவகிடுகிறார;.  போலி மனிதர;கள் மத்தியில் முயல்குட்டிகள் அபு+ர;வப்பிறவியாகின்றன.  கள்ளங்கபடமற்ற முயல்குட்டிகளால் வாழ்வு அர;த்தப்படுகிறது. முயல்குட்டிகளால் பொறுக்குத்தட்டிய வாழ்வு வளமையாகின்றது. ஒரு கட்டத்தில்  வாழ்வே முயல் குட்டியாகிவிடுகின்றது.
‘இவ்வாழ்வு முயல்குட்டிகளால் ஆனது’ என்கிறார; கவிஞர;.  இன்னொரு கவிதையில் மனிதரையும் வாழ்வையும் அணில்குட்டியாகப் பார;க்கிறார;.  வெளியில் தாவிக்குதித்து, விளையாடி, இரையுண்டு வாழ்ந்து திளைக்கும்- அங்கிங்கெனாதபடி ஓடும் அணில் கடைசியில் நம்முள் கலந்துவிடுகிறது கவிதையில்.
வுhழ்க்கை அக்கறை மட்டுமல்ல.  வாழ்வு குறித்த ஏக்கங்களும் கவிஞர;களுக்குண்டு.  எல்லோரின் இறுதிவேட்கையும் விடுதலைதான்.  விட்டு விடுதலையாதல் வாழ்வில் சாத்தியமில்லை.  ஏதோ ஒன்றில் அடிமைப்பட்டு கிடக்கிறது மனம்.  தன்னால், தன்னில் காணமுடியாததை பிற உயிராய் உணர;தலில் வசப்படுகிறது வாழ்வு.  முயல், அணில்…. எல்லாம் வன்மை நிறைந்த வாழ்வின் வலிகளுக்கு மென்மை நிறைந்த ஆறுதலின்றி வேறென்ன?  இது தப்பித்தல் அல்ல. மனிதனின் ‘வளர;ச்சி’  உண்மையில் வளர;ச்சியா? வீழ்ச்சியா? என்ற ஆதங்கத்தின் தேடல்.  ஆனந்தத்தின் ருசிகாண் முயற்சி.
குழந்தைகளின் பிரபஞ்சம் அலாதியானது.  பிற உயிர;கள் போல இயல்பான குட்டி உலகை குழந்தைகள் படைக்கிறார;கள். பெரியவர;களின் உலகம் போட்டிகளும் பொறாமைகளும் அதிகாரத் திமிர;த்தனங்களும் பேராசைகளும் நிறைந்தது.  குழந்தைகள் கீழிலிருந்து உலகைப்பார;க்கிறார;கள்.  பாசாங்கற்றப் பிரியங்களால் ஆனது அவர;களின் உலகம்.
திலீபன், கவிஞரின் மகன்தான்.  அடர;வனமொன்றை உருவாக்குகிறான். தாகமறிந்து தண்ணீர;தரும் ஆயாவை நீரோடையாகவும், பார;த்ததும் புன்னகைக்கும் தோழியைத் தேவதையாகவும், கூர;பென்சில் காட்டி பயமுறுத்தும் பையனை வவ்வாலாகவும், பணிவாகப் பணிவிடை செய்யும் ப்யு+னை சிங்கராஜாவாகவும், அடிக்காத வி‘;ணுப்பிரியா மிஸ்ஸை தோகைவிரித்தாடும் மயிலாகவும், சோகமாக வௌ;ளைப்புடவையில் வரும் கோமதி மிஸ்ஸை உற்சாக முயல்குட்டியாகவும், தன் தோழர;களை சிட்டுகளாகவும், அவர;களுக்கு தேன்நிறைந்த மலர;களையும், கனிகள் நிறைந்த மரங்களையும் பரிசளிக்கிறான்.  எப்போதும் கைப்பிரம்போடு நிற்கும் ஹெட்மிஸஸ் மரத்துக்குமரம் தாவும் குரங்காக படைக்கப்படுகிறாள். இதற்கு ‘காரணம் நிச்சயம் திலீபன் இல்லை’ எனக் கவிதை முடிகின்றது.  வாசக மனத்தில் குழந்தைகள், கல்விமுறை, தேர;வுகள், ஆசிரியர;கள் ஆகியவை குறித்த உரையாடல்கள் விரிகிறது.
கவிஞர; இளமுருகு ( பெருமாள் முருகன் ) பல்லாண்டுகளுக்கு முன் ‘சிரு‘;டி’ என்றொரு கவிதை எழுதியிருந்தார;.  அதில் ஒருகுழந்தை தன் பென்சில் கொண்டு ஒரு மாநகரைச் சிரு‘;டிக்கும். மாநகரில் எல்லாம் இருக்கும். பள்ளிக் கூடத்தைத் தவிர.  குழந்தைகளின் இயல்பு+க்கங்கள், விருப்பங்கள் குறித்து பெரியவர;களுக்கு உணர;த்த இது போன்றக் கவிதைகள் நிறையத் தேவை.
இன்னொரு குழந்தையின் நிலையைப் பாருங்கள்:
மாநகர வாழ்வின் கண்டி‘ன்ஸ் அப்ளைகளுக்கப் பிறந்த மகனொருவன் சிறகு முளைத்த பந்தை யாருமற்ற தன்வீட்டின் அறைசுவரில் அடித்து அடித்து விளையாடுகிறான் அந்தப் பந்து அவனுக்கும் தனிமைக்குமாகப் போய்த் திரும்பி திரும்பிப் போய் ஓய்கிற வேளையில் வந்தே விட்டது மற்றும் ஓர; இரவு.
இன்றைய குழந்தை வளர;ப்பை இதைவிட எப்படி உணர;;த்தமுடியம்? பொருள் தேடும், நுகர;வியம் பெருகிவிட்ட, இருவரும் பணிக்குச்செல்லும் சூழல் பரவலாகிவிட்டச் சமூகத்தில், இந்தக் குழந்தையும், பந்தும் ஒன்றுதானே?
வாழ்வு மீதான, குடும்பம் மீதான கரிசனத்தைக் கவிதைகளாக்கியுள்ள கதிர;பாரதி இந்த நிலமும், உரிமையும் பறிபோவதை ஆதங்கத்தோடு பல கவிதைகளில் பதிவு செய்கிறார;.  நிலத்திலிருந்து நீரை உறிஞ்சி மலடாக்கி, வீரியவிதைகள் என்ற பெயரில் மரபார;ந்த விதைகளை அழித்து, விதையில்லா கனிகள், முட்டையிடாக் கோழிகள் என இயற்கையை வீழ்த்தி செயற்கையில் வதைபடும் வாழ்வை கருநிற கோலாக்களின் ‘ச்சியர;ஸ்’ கவிதையில் எடுத்துக்கூறுகிறார;.
நிலம் வெறும் மண் அல்ல.  அது இரத்த பந்தம். உணர;வுப்பெருக்கு.  பண்பாட்டின் தொடர;கன்னி. அதை கூறுபோட யத்தனிக்கும் ஏகபோகங்களை நோக்கி- பன்னாட்டு பகாசுரா;களை நோக்கி நீள்கிறது கவிதைத் தடி.
அது (நிலம்) நித்தமும் நாங்களிட்டு உண்ணும் எம் அன்னத்து உப்பு. இளம்விதவை ஈன்றெடுத்த முதற்மகவு. பொட்டல்வெளி காளி வெளித்தள்ளிய நாவு. எந்தையும் தாயும் உருவி உருவி முத்தமிட்ட எம் ஆணுறுப்பு. எம் காதற்பெண்டிரின் பெண்ணந்தரங்க உறுப்பின்சுவை. தாவுக்காலிட்டு உச்சங்கிளையில் தீவனம் கடிக்கையில் காற்றிலாடும் மறியின் பால் செறிந்த மார;பு. சேறுகுடித்து ஊறிக்கிடக்கும் கருவேலமுள்ளின் முனை. தன்மூத்திரம் குழைத்த மண்ணெடுத்து இரையின் முகத்தில் விசிறி குரல்வளை கடித்திழுக்கும் குள்ளநரி. இப்போது எம் நிலம் தன் மூத்திரம் குழைத்தெடுத்துக் காத்திருக்கிறது. வாரீர; வாரீர;.
வெளியிலிருந்து பார;த்தால் இது வெற்று ஆவேசமாகக்கூடப்படும்.  ஆனால் நிலமே வாழ்வாக, நிலத்தையே உயிராக, உறவாக வரித்து வாழும் வேளாண் மக்களின் இந்த அறச்சீற்றம் மிகமிக நியாயமானது.  உயிர;வதைக்கு எதிராக முனங்க முடியாது.  கத்திதான் தீரவேண்டும்.  பொதுவாக குள்ளநரி இழி உவமையாகவேவரும். இங்கே எதிர;ப்பின் குறியீடாகிறது.  கலக அழகியல் இப்படித்தானே அமைய முடியும்? வழமைகளைத் தலைகீழாக்கித் தருவதுதானே மாற்றின் மகத்;துவம்?
‘எங்களிடம் நீர;முள்ளிப்பு+க்கள் இருந்தன’- இந்த மண்ணின் வரலாற்றைச் சொல்லும் இனிய கவிதை.  தாத்தாவிடம் இருந்த விவசாயப்பாடல், ஜோடி மாடுகள், இறாபுட்டி, கதை, கனவு, உறக்கம்   எல்லாம் பறிபோய் கண்ணீரும் தாகமும் பெருகி மண்ணில் விழுகிறார;. டமக்கரான் (பு+ச்சிக்கொல்லி மருந்து) போத்தலில் தண்ணீர; வருகிறது. ‘அவரைப் புதைத்த போது அழுது அரற்ற அவர; பாடல் இல்லை எம்மிடம்’ என முடிகிறது கவிதை. பு+ச்சி மருந்துக்கும், தூக்குக்கயிற்றுக்கும் பலியாகும் விவசாய வாழ்வை சித்திரிக்கும் நல்ல கவிதை.  பல்லாயிரம் கோடிகள் மோசடி செய்த ஆகாய விமானங்களை அயல்தேசங்களுக்கு நாடு கடக்கவிடும் அரசாங்கம், விதை நெல்லுக்காய் வாங்கின கடனுக்காய் கோவணத்தை உருவும் அவலத்தை என்ன சொல்வது?
எதை உண்ண வேண்டும்? எதை உடுக்கவேண்டும்? எதைப் பேச வேண்டும்? எதை எழுத வேண்டும் ? எனத் தீர;மானிக்கின்றன செங்கோல்கள்.  மனிதனுக்கு மனிதன் மேல் ஒ கீழ் வர;ணக் கோடிழுத்த மனுஅதர;மத்தின் வெளிப்பாடுதான் இது.  என் சமையலறைக்குள் பு+ட்ஸ்கால்கள்வரும் தேசத்தில் வாழ்வது அவலமல்லவா? தாத்தனும் பாட்டனும் தின்றதைத் தின்பது தவறா?  செத்த மாட்டின் இறைச்சிக்காய் உயிர; மனிதனைக் கொல்வது நீதியா?
கதிர;பாரதியின் ‘ கருவாட்டு ரத்தமூறிய இட்லி’ இத்தொகுப்பின் மிகச்சிறந்த கவிதை. எளியவர;களுக்கு இட்லியே ஆகப்பெரிய பலகாரம்.  (ஆனந்தாயி நாவலில் சிவகாமி ஏழைகளின் இட்லியின் மகத்துவத்தை அழகாகச் சொல்வார;). இட்லிக்கு தொட்டுக்க கருவாட்டு ரத்தம். அந்த உணவு மட்டுமல்ல.  ‘அடடா இந்தக் காலைதான் எவ்வளவு ருசிமிக்கது.  இந்த ருசிக்குப் பிறந்த இந்த நாள் தான் எவ்வளவு தித்திக்கிறது’,  வாசம் வயிற்றையும் நெஞ்சையும் நிறைக்கும்.  அன்றைய நாளே ருசியாகித் தித்திக்கிறது.  சுரக்;கரைப்பொங்கல், புளியோதரை, பஞ்சாமிர;தம், பருப்புக்கடைசலுக்குச் சற்றும் குறைந்ததல்ல கருவாட்டுக்குழம்பு இட்லி.  இதுதான் மாற்றின் மாற்று.  ஏழை எளியவர;களுக்கு உணவுதானே துய்ப்பு(நதெழலஅநவெ)? உணவுப் பண்பாட்டை உணர;வுப்பு+ர;வமாகச் சொல்கிறது இக்கவிதை.
கதிர;பாரதியின் எல்லாக் கவிதைகளையும் சமூக, அரசியல், பண்பாட்டுப் பின்புலங்களில் வைத்து விரித்துரைக்கலாம்.  களமும், கருத்தும் எவ்விடத்திலும் துருத்திவிடாமல் மிகக்கவனமாக கவிதையைக் கலையாக்கி வெற்றிபெறுகிறார;.  இவர; கவிதைகளில் கையாளும் தலைப்புகள், தொடர;கள் வித்தியாசமாய் அமைந்து வியப்பைத் தருகின்றன.
‘ பின்னிரவு முத்தமொன்று கூரிய பனிவாளாக’ ‘ எனக்கான முதிரிளம் பருவத்துமுலையே’ (நிலம்) ‘ நானொரு கள்ளத்தராசு’ ‘ புன்செய் வெயிலாகும் முத்தம்’ ‘ ஒரு குளத்துக் குரவையாக துள்ளுகிறது என் சொற்களின் கனவு’ ‘ பகலென விரலைப்பற்றினேன்’ ‘ வெட்டுக்கிளியை சூப்பர; மேக்ஸ் பிளேடுக்குப் பழக்குதல்’ ‘ கற்றாழைப்பழம் சுவைத்தேன்’
இப்படி நிறைய்ய.  ஆல் தி பெஸ்ட், ச்ச்சியர;ஸ், ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட், கண்டி‘ன்ஸ் அப்ளை… போன்ற இக்காலப் புகழ்பெற்ற நிலைமொழிகளைத் தலைப்பாகக்கொண்ட கவிதைகள், இச்சொற்களின் அபத்தங்களைப் பேசவதுடன் ‘இந்றையத் தன்மையை’ (ரி வழ னயவந ) இக்கவிதைகளுக்கு வழங்குகின்றன.
‘அரசியல் அற்ற’ இலக்கியங்;கள் பெருகிவரும் தமிழ்ச் சூழலில் மாற்று அரசியலை முன்மொழியும், பண்பாட்டு அரசியலை பிரகடனப்படுத்தும் கதிர;பாரதி பாராட்டத்தக்கவர;.
“ இந்தச் சொல் எங்கிருந்து வந்ததோ  அங்கிருந்;தே வந்தேன் நான்  இந்த வலி எங்கிருந்து வந்ததோ  அங்கிருந்தே வந்தது அந்தச் சொல்”
என்ற ஒற்றைப் பிரகடனம் இவரின் கவிதைகளுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.
“மீண்டும் போகிறேன் மரணத்தின்போது துளிர;த்திருந்த அந்த வீட்டு மாமரத்தின் செந்தளிர;களைப் பார;க்க வேண்டும் எனக்கு”
இது இவரின் நம்பிக்கைக்கான நற்சான்று. கதிர;பாரதியை இன்றைய நவீனத் தமிழ்க்கவிதையின் ‘நம்பிக்கையாக’ வரவு வைக்கலாம்.

ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் ஃ கவிதைகள் ஃ கதிர;பாரதி ஃ உயிர;மைப்பதிப்பகம் ஃ  1ஃ29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18 ஃ விலை ரூ. 85

13 June, 2016

ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் - சுப்ரபாரதிமணியன்



          அடையாள அரசியல் என்பதெல்லாம் பெரிய சொல்வழக்கு... அடையாளம் என்று சுருக்கிக் கொண்டு பார்த்தால் கூட கதிர்பாரதியின் முகம் எதிலும் தென்படாது கவிஞர், பத்திரிக்கையாளர் என்பதைத் தவிர. ஒரு முக்கிய இலக்கியப் பரிசுத்தேர்வில் இருந்தபோது வேதாகம், அதன் தொன்மக்குறீயீடுகள், விவிலிய மாந்தர்களின் பெயர்கள் சரளமாய் அவரின் கவிதைகளில் தென்படுவதைப்பார்த்து ஒரு மூத்தப் பேராசிரியர் அவரின் அடையாளம் பற்றி கேள்விகள் எழுப்பினார். ஆ.செங்கதிர்செல்வன், கதிர்பாரதி என்ற பெயர்களையே முணுமுணுத்தேன்.  ஆனால் அவர் வேறெதையோ தேடிக்கண்டடைந்தார். அந்த “ அடையாளத் “தை மேம்படுத்தும் முயற்சிகள், வேறு அடையாளங்களைச் சிறுமைப்படுத்தும்  முகங்களை அவர் அதில்  தேடினார். எதையும் கண்டடையவில்லை என்பதில் எனக்கும் ஆறுதல்தான்.ஆனால் அந்தப் பேராசிரியர் போன்றோர் அதில் அடையாளம் கண்டு கொண்டதை இதில் உள்ள கவிதைகளைக் கொண்டு  ( ஆதியாகமம், மற்றும் இரண்டாவது கல், பத்து நிந்தனைகள், அய்ந்து அப்பங்களும்.....) நிச்சயப்படுத்திக் கொள்வர். ஆனால் அதை மீறி குதர்க்கமாய் எதையும் கண்டு கொள்ள முடியாது. அவையும் சங்கீத வசனங்களாய் கவிதைக்குள் வந்திருக்கும் வழக்கைதான் காண முடியும்..சாதி வேண்டாம் மதம் வேண்டாம்  என்ற உறுதியான மனநிலையில் சாதி இலக்கியத்தைத் தூக்கிப்பிடிக்கும் ஒரு போக்கு தீவிரமாகியிருப்பது எவ்வளவு துயரம் கை நிலத்தை வாய்க்கரிசி போடுவது போல்.
கதிர்பாரதியின் தமிழ் சமூக்கதையில் - ஒவ்வொரு கவிதையிலும் ஒரு சமூக வழக்கு புதைந்திருப்பதையும் நிலம் சார்ந்த அநுபவங்களின் விஸ்தரிப்பும் ஒரு அழகியலாக அமைந்து வருவதையும் காணலாம்.அது உருவாக அந்நிலத்து சாரமான வாழ்வும் நிலத்தை விட்டுப் இடம் பெயர்தலில் உண்டாகும் சீர்குலைவுகளும் மூலங்களாக இருக்கின்றன. அவரின்  “ நெற்பயிரின் பனிமொட்டுகளில் பின்னங்கால்களை ஊன்றும் வெட்டுக்கிளிகள் பறந்துலவும் நிலம் “ கார்பரேட்டுகளால் சிதைக்கப்படுவதைப் பற்றிய சித்தரிப்புகள் முக்கியமானவை.  ” நிலவே../மதுவே/ உனை ஒருவருக்கும் கொடேன் “ என்ற தீர்மானத்தில் இருப்பவர்தான். ஆனால் எல்லாம் கை நழுவிப் போகின்றன. காலடி நிலம் சரசரவென்று பாம்பு நழுவுவது போல் வேற்றாள் கைகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. அதை எதிர்த்து வழக்குத்தொடுப்பதிலும் அந்த உணர்வுகளைச் சங்கமிக்க வைத்து வாதாடி மனிதாபிமான சான்றுகளை எடுப்பதுரைப்பதிலும் அவரின் கவிதைகள் முன் நிற்கின்றன எனலாம். அதுவே அவர் கவிதைகளின் பொது அழகியலாவும் மிளிர்கிறது.
                        ஆனந்தியைப் பெண்ணாக நான் நினைத்துக் கொண்டு ( முதிரிளம் பருவத்து முலையுடன் ) தட்டான்கள் பெண் கவர்ச்சி சார்ந்தே தாழப்பறப்பதாக நினைத்தேன். ஆனால் ஆனந்தி நிலமாகிப் போனதில் எனக்கும் இன்னும் மகிழ்ச்சிதான். தானியக்கிடங்குகள் நிறைந்த நிலத்தின் பாடல்கள்,மெட்ரோபாலிட்டன் நிலத்தின் நாற்சந்தி, டம்ளரில் தண்ணீர் எடுத்து காடு வளர்க்கும் சிறுவன், மாநகரப்பூங்காவின் வடமேற்கு மூலை  என்று காட்டி     மெட்ரோபாலிட்டன் நிலத்தில் வேரறுந்து கிடப்பவர்களைக் கவிதைக்குள் கொண்டு வருகிறார்.ஆட்றா ராமா.. .  ஆட்றா ராமா.. ஆட்றா ராமா.. ஆட்டங்கள் ஆடி சமரசம் செய்து கொள்பவர்களால் காணப்படும் பின் தங்கியவர்களின் உயரம் தட்டுப்பட்டு விடுகிறது. கருவாட்டு ரத்தமூறிய இட்லிகளும் இரு கரு நிற கோலாக்களும், இனும் பிறவும் பொய்யா மெய்யா என நாம் வெடித்து விளையாடு எருக்கம் மொட்டுகளாக மாறி நம்மை அலைக்கழிக்க வைக்கிறது. பகலும் இரவும் மாறி மாறி அலைக்கழிக்கின்றன. ( இத்துணை ஆதூரமானதா உன் விரல்.. இத்துணை ஆதூரமானதா உன் பகல் .,சில்லென விடியப்போகும் இரவால் அழகாகப் போகிற பகல் – வெட்கமில்லா இரவு )

பல ஆங்கிலத் தலைப்புகள் உறுத்துகின்றன. பலரை உறுத்தவென்றே பல பொருட்களின் மேல் அவதானித்து எழுதப்பட்ட இத்தொகுப்பின் கவிதைகள் –கேரட், ரயில், குரங்கு, எறும்பு, முயல்குட்டிகள், புறா , ஆமை , அணில் – ம்னிதர்களின் மேலான அவதானிப்புகள் என்றேயாகிறது.
                          வெட்டுக்கிளி, சிட்டுக்குருவி போன்றவற்றை உருவகப்படுத்திய  ( பக். 65, 69 ) கவிதைகள்  ஆவணக்கொலை போன்ற சமூக நிகழ்வுகளின் மீதான விமர்சனமாகவும் இருக்கிறது. விமர்சனங்களை மீறி ” மோதி மிதித்து  முகத்தில் உமிழ்ந்து விடும் ( நான் ..பக்க.92 )  ” கோபத்தை எதிர்ப்பின் விதைகளாகவும் இக்கவிதைகளில் வெளிப்படுத்துகிறார். முப்பரி பின்னலிட்ட நாக சர்ப்பமாகக் கிடக்கும் ஜடையைப் போல மொழியின் இறுக்கத்திலும் அனுபவங்களின் அடர்த்தியிலும்  இக்கவிதைகள்  வாசிப்பின் போதும் பின்னாலும் யோசிக்கையில் சுழித்தபடி சிலேப்பி மீன்களைப் போல் நீந்திக்கொண்டிருக்கின்றன.
  (ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்
96 பக்கங்கள் .ரூ 85, உயிர்மை பதிப்பகம். , சென்னை  )

03 June, 2016

ஆனந்தித் தட்டான்கள் - கவிஞர் ராஜசுந்தரராஜன்

கவிஞர் கதிர்பாரதியிடம் ஒரு கதைத்தல்முறை (kind of narration) இருக்கிறது. எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டது அது.
“என் தாத்தாவிடம்
விவசாயப் பாடலொன்று இருந்தது.
விதைக்கும்போது அதை முணுமுணுக்கவும்
அறுவடையின்போது எக்காளமாக முழங்கவும்
அவருக்கொரு வாழ்வும் இருந்தது
அதில் என் ஆயா
எப்போதும் சிரித்துக்கொண்டிருந்தாள்.”
இப்படி. இப்படி, ‘எங்களிடம் நீர்முள்ளிப் பூக்கள் இருந்தன’ என்னும் கவிதையில் ஏழு கண்ணிகள் உள்ளன. ஒரொரு கண்ணியும் “என் தாத்தாவிடம்” என்றே தொடங்குகிறது. தமிழ்க்கவிதையில் இப்படியானதொரு கபடியாட்டப் புனைவிற்கு காரணவர் மனுஷ்யபுத்திரன்.
இதற்கான காரணம், ம.பு. தன் கவிதைகளில் கதையாடல்களைக் கொண்டுதர விழைகிறார். பழங்கதைகளில் அல்லது இசைப்பாடல்களில் இப்படி மறுகமறுக வரும், கவனித்திருக்கிறீர்களா? ஆனால் ம.பு., இதற்கூடாகவே, ஒரு பின்நவீனத்துவப் பிரதியையும் முயல்வார். அது காரணம் அவரது மொழியில் அணியலங்காரம், கிட்டத்தட்ட, தவிர்க்கப்பட்டிருக்கும்.
கதிர்பாரதியும் ஆங்காங்கே கதையாடுகிறார், ஆனால் அணியலங்காரம் வேண்டாதவராகத் தெரியவில்லை. இதே கவிதையில், //நீர்முள்ளிப் பூக்களை முத்திசெய்யும்/ ஊசித் தட்டான்களும்/ காயிலிருந்து செங்காய்ப் பருவத்துக்கு மாறும் இலந்தை/ இழுத்துவந்த மஞ்சள் வெயிலும்...// என்று அணிநடைக்கு மாறிவிடுகிறார் பாருங்கள்!
“மெழுகுவர்த்தியை உயிர்ப்பித்து இரவை எரித்தேன்.”
“அப்போது வீசிய பெருங்காற்றுக்கு
ஒடிந்துவிட்ட முருங்கங்கிளையில்
என் பதற்றம் தொற்றிக்கொண்டுவிட்டது.”
“அடைக்கலாங்குருவிகள் கொறித்து உமிழ்ந்த
நெல் உமிகளை
காற்று தன்போக்கில் அடித்துக்கொண்டுபோவதென
வார்த்தைகள் என்னைவிட்டுப் போய்விட்டன.”
கவிஞராகப் புகுந்த எவர்க்கும் இயல்பாக வரக்கூடியது அணிமொழி (figurative language). ஆனால் அதைத் தவிர்த்து தாவுகிறவர்களை கவி இல்லை என்று சொல்லி, விட முடியுமோ? ஆது. கூடவே, அவர்கள் சோதனைக்காரர்களும்கூட. அப்படித்தான் சொல்லப்பட வேண்டும். மாறாக, கதிர்பாரதி ஆனால் எளிய இயல்பான கவிஞர்.
"ஆனந்தியின் இமைகளிலிருந்து
முதன்முதலில் தட்டான்கள் பறந்தபோது
எனக்குள் மழைவரும் போலிருந்தது."
இப்படியோர் எளிய இயல்பான அணிமொழி வாய்க்கப்பெற்றவர் இவர். “ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்” என்னும் இக் கவிதை, முதலில் வந்த ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்’ தொகுதியிலும் இடம்பெற்றிருக்கிறது. இரண்டாம் தொகுதிக்குத் தலைப்பாகவும் இடப்பட்டிருக்கிறது. ஆகவே, இதிலென்ன முக்கியத்துவம் என்று பார்க்கத் தோன்றியது. காட்சி, வளமையிலிருந்து வெறுமைக்கு மாறுகிறது. உணர்வும் அப்படியே. “ஆ.பொ.தா.த.” தொகுதியின் தொனி இதுதான்: வளமைதிரிந்த வெறுமை.
நகர்சார்ந்த வாழ்க்கைக்கு இடையிடையே நாட்டுப்புற நினைவுகள் தோன்றித்தோன்றி அந்த வெறுமையை வெடிப்புறச் செய்கின்றன. //அவன்தான் காடு வளர்க்கப்போகிறேன் என/ டம்ளரில் தண்ணீர் எடுத்துப் போகிறான்// என்று, நகர்ப்பிறந்து நகர்வாழும் சின்னஞ்சிறு மகனின் விளையாட்டிலும்கூட அது தகிக்கிறது.
இங்கே, ‘தணுக்கிறது’ என்றல்லாமல் ‘தகிக்கிறது’ என்கிறேனே ஏன்?
“உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி/ பச்சமலெப் பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க...” என்றொரு திரைப்பாடல் இருக்கிறது, இல்லையா? கேட்டிருப்பீர்கள். அதன் இடையிலோர் “ஆரீராரோ...” அது நம் உள்ளத்தை அறுக்கிறது அல்லவா? கலையாப்பில் இதுவும் ஓர் அணிதான். இது மலைதல் (montage) எனப்படும்.
ஒருசார்ந்த காட்சிகள் அல்லது கற்பனைகளால் மலையப்படுவதைக் காட்டிலும் முரணானவைகளால் மலையப்படுகையில் இன்னும் சிறப்பாக இருக்கும். கறுத்த- வானத்தில்-ஒரு-மின்னற்-கீற்று அழகுதான், ஆனால் அதனினும் அழகு மழைக்-கரு-முகில்களை-ஊடுருவி-இறங்கும்-வெய்யில்-விழுதுகள்.
“ஊமத்தங்காயின் முட்களில் சிக்கிக்கொள்ளாமல்
பூவரசம்பீப்பியின் ராகத்தோடு மிதந்தவனுக்கு
மெட்ரோபாலிட்டன் நிலம்...”
“மரணத்தின்போது துளிர்த்திருந்த
அந்த வீட்டு மாமரத்தின் செந்தளிர்கள்...”
கவிஞர் நேசமித்ரன், படிம/ உவமங்களால் இறுகக் கட்டுகிறவர். “சற்றுத் தளர்த்தி மிடையலாமே?” என்று வேண்டியபோது, “வேண்டுமென்றுதான் அப்படிச் செய்கிறேன்,” என்றார். அது ஒரு நிலைபாடு. (பழந்தமிழ்ச்சொற்களைப் புகுத்தி எழுதுகிறவன் நான். நானும் வேண்டுமென்றேதான் இப்படிச்செய்கிறேன். இது ஒரு நிலைபாடு.)
நேசமித்ரனின் உவமஞ்செறி இறுக்கத்திற்கும் மனுஷ்யபுத்திரனின் வெளிப்படக் கிளத்தலுக்கும் இடைப்பட்டதொரு மொழிநடை கைவரப்பெற்றவர் கதிர்பாரதி. ‘ஆம்... உன் குரல்’, ‘புன்செய் வெயிலாகும் முத்தம்’ முதலிய உவமச்செறிவுள்ள கவிதைகளின் கிளத்தலெளிமை இதற்குத் தெளிவு.
முதல் தொகுப்பினை ஒப்பிட இரண்டாவதில் கிராமமும் காமமும் அரசியற்பகடியும் கூடியிருக்கிறது. ‘முப்பிரி பின்னலிட்ட நாகசர்ப்பம்’ போன்ற கலவிக்களத்துக் கவிதைகள் கிழத்தையும் கிளர்த்தும்.
தாழப்பறக்கும் தட்டான்களின் நிலம் ஈரநினைவுகளின் கோடைவெளி.