26 September, 2024

மொழிபெயர்ப்புக் கவிதை ~ அம்மா சிறுமி ~ மொழிபெயர்த்தவர் : கவிஞர் சேலம் ராஜா

சேலம் ராஜா
னது 'அம்மா சிறுமி' கவிதையை மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் கவிஞர் சேலம் ராஜா. வாழ்விடம் வாழப்பாடி. பிழைத்தலின் நிமித்தமாக லாரி டிரைவராக இந்தியா முழுக்கச் சுற்றிவருபவர். இப்படி அலைந்து திரியும்போது மலையாளம் பேசவும் தன்முனைப்பில் எழுதப்படிக்கவும் கற்றுக்கொண்டவர். 'கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள்',,`ஒரு லோடு மழை ஏற்றுபவன்’ ஆகிய இவரது கவிதைத் தொகுப்புகளை இடையன் இடைச்சி நூலகம் வெளியிடிருக்கிறது. "இப்போதுதான் மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்திருக்கிறேன். நிறை குறைகள் இருந்தால் சொல்லுங்கள்" என்றார். எனக்கு சுத்தமாக மலையாளம் தெரியாது. தெரிந்தவர்கள் ராஜாவிடம் சொல்லலாம். கவிஞர் சேலம் ராஜாவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.'அம்மா சிறுமி' நேரடிக் கவிதையும், சேலம் ராஜாவின் மலையாள ஆக்கமும் கீழே உள்ளன.

அம்மா சிறுமி - கதிர்பாரதி
**

மகளுக்குக்
காத்திருக்கும் வேளை.
பள்ளி மைதானத்தில்
ஊஞ்சலாடுகிறாள்
அம்மா.

முன்னேறும்போது
சிறுமி.
பின்னேறும்போது
அம்மா.

முன்னேறி ஒருமுறை
வானம் உதைத்தவள்
மகள் கண்டதும்
பின்னேறி வந்து
பூமியில் நின்றுகொண்டாள்.



Al

No comments: