27 September, 2024

கவிதை ~ குழந்தை நட்சத்திரம் ~ கதிரபாரதி



கிறிஸ்துமஸ் விடுமுறை உழவன் விரைவு வண்டி சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு 7மணி நேரம் வேக மூச்செடுத்து ஓடிவந்து 2_வது நடைமேடையில் விடிகாலை 05:20 மணியில் நின்று ஓய்ந்துவிட்டது.

அதன் வயிற்றுக்குட்டியாக
நடைமேடையில் குதித்த ஒரு குழந்தை,
தூங்கிவிழித்த புதுவிழிகளால்
வானத்தை அண்ணார்ந்து பார்த்து
தந்தையிடம் கைக்காட்டினாள்… `அங்க பாருங்க அந்த நட்சத்திரத்தை
நான் பார்த்துட்டேன்.`

உழவன்
300 மைல்கள் தாண்டி
மூச்சடக்கி ஓடிவந்ததும்
அந்தக் குழந்தை நட்சத்திரத்தைப் பார்க்கத்தான்.

-கதிர்பாரதி

No comments: