19 January, 2010

பச்சைய பருவம்

நீதான் வழிநடத்திப் போகிறாய்

மறியின் பச்சைய கனவுகளை
முடித்துவைக்கும் மேய்ப்பனைப் போல
எலிகளின் தானிய சபலத்தை
நிவர்த்திக்கும் கழனிகளைப் போல
உன்னை மையமாக்கி
சுழல்கிறதென் உலகம்

உனது கோபுரங்களில் குடியிருக்கும்
ஆசையின் கனவுக் கண்களை
உனது சுனைகளில் நீராட்டிச் சிவக்கவிடுவாயா

காதுகளை உரசித் தொங்கும்
நேர்த்திக் கடனென
காமத்தின் பக்கவாட்டில் ஆடுகின்றன
கொங்கைகளின் மீதான வேட்கை

ஒரு வட்டக் கிணறு போல
குறு அலைபரப்பும் உன் பருவத்தை
நம்பியிருக்கிறது அதன் புன்செய்நிலம்

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

2 comments:

பனித்துளி சங்கர் said...

இதை காதல் என்பதா ?
இல்லை காமம் என்பதா ?
என்று கேக்கும் அளவிற்கு இரண்டும் கலந்து சிந்திய கவிதை .

அற்புதம் வாழ்த்துக்கள் !

கதிர்பாரதி said...

thanx