29 December, 2009

குளம்

புணர்ச்சிக்குப் பரிச்சயமான யோனியை
மிருதுவாய் மலர்த்தி
அதிரப் புணர்கையில்
மேலெழும்பி மிதக்கும் இசையை
ஒத்திருக்கிறது
தவளைகள் தத்தித்தத்திச் செல்ல
ஒலிஎழும்பி அலைமோதும்
மாரிக்கால குளம்

1 comment:

அனைவருக்கும் அன்பு  said...

ஆழ்மன கசிவின் ஒப்பனையில்ல உவமை ...............