10 December, 2009

நின் நினைவுகள்

நித்தம் புணர்கின்றன என்னை
வன்புணர்ச்சியின் ஆதிக்கத்துக்கு
சற்றே குறையும் அதன் ஆலிங்கனத்தில்
மனம் கிலேசமுறுவதை மறுப்பதற்கில்லை
உள்ளங்கால் நீவி உந்திச்சுழி கடந்து
மார்பு ரோமம் கோதி கழுத்துப் பள்ளம் நிறைத்து
உச்சந்தலையில் மய்யமிடும்
பரத்தையின் உதடுகளாய்
புலன்களைத் திரும்பிப் படுக்க வைக்கின்றன
வாலை இடவலம் சுழித்தபடி
நீந்திப் பரவி நதிக்குக் கிளர்ச்சியூட்டும்
சிலேப்பி மீன்களுக்கு உவமையாக்கலாம்
உன் நினைவு முயங்கும் தீவிரத்தை
ருசிக்கு மயங்கியலையும் பூனையாய்
நானும் இயைந்து மிதக்க
அதிர்ந்து அதிர்ந்து அரங்கேறுகிறது
ஒரு திருவிழா கொண்டாட்டம்
இருள் விலக்கி பகலில் எண்ணுகையில்
நான் கொஞ்சம் செலவாகி இருந்தது
கூடவே நானும்
-இருவாட்சி பொங்கல் மலர் 2010

No comments: