25 December, 2024

இரவோடி • நாவல் • என்.ஸ்ரீராம்


ன்.ஸ்ரீராம் எழுதியிருக்கும் மூன்றாவது நாவல் அல்லது சற்றே பெரிய முதல் நாவல் "இரவோடி". சென்னைப் புத்தகக் காட்சி 48_ல் பரிசல் வெளியீடாக வெளிவர இருக்கிறது.

கொங்கு நிலத்தின் அமராவதி ஆறு பாயும் / பாயாத நிலவாழ்வின் நவீனச் சங்கச் சித்திரப் பனுவலாக விரிகிறது "இரவோடி".

அமராவதி ஆற்று குத்துப் பாறையின் மீது நின்றுகொண்டு கொங்குவெளி யின் பொழுதுகளை, வாழ்வை, அஃறிணை - உயர்திணைகளின் ஒத்திசைவுகளை, சடங்கு - சாங்கியங்களை சிற்றுடுக்கையை இசைத்துக்கொண்டு பாடுகிறார் என்.ஸ்ரீராம். அமராவதி ஆறு ஓர் உயிரினம்போல நிலத்தையும் பொழுதையும் வாழ்வையும் சுற்றிவளைக்கிறது நாவல் எங்கும்.
இந்தப் பிரதியின் முதல் வாசகனாக இருந்து இந்த வார்த்தைகளைச் சொல்கிறேன்... "தமிழ் நாவல்களின் கிளாசிக் வரிசையில் சேரத் தகுதியுள்ள ஒரு முக்கியமான நாவல் 'இரவோடி'." நல்ல நாவலைப் படிக்க தமிழ் வாசகர் தயாராக இருக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்போதைக்கு "இரவோடி" முகப்பு அட்டையை இங்கே பகிர்கிறேன். நாவல் வெளியானதும் நிறையப் பேசுவோம்.
வெளியீடு: பரிசல்

No comments: