17 August, 2010

அவனிடம் ஜாக்கிரதை

அவன் யாதொன்றும் செய்யவில்லை
அப்படிச் செய்கிறவனுமில்லை

உங்கள் வடிவங்களில்
தேங்க இயலாமல் கசிந்தான்
அப்போதே சஞ்சலத்தை
மறைக்கச் சிரமப்பட்டீர்கள்

உங்கள் வார்த்தைகளுக்கு
வளைதல் செய்யும் லாகவமற்று
ஒடிந்ததில் குமைந்து
அசூசைக் கொண்டீர்கள்

நீங்கள் வாரி இறைத்த
நிறங்களைப் பதட்டத்தோடு அதீதமாய்ப்
பூசிக்கொண்டதில்
கடைவிழியில் அன்னியப்பட்டான்

உங்களின் தீவிரத்தில்
ஆழவும் முடியாமல்
கலக்கவும் இயலாமல்
அவன் திணறுதலில் கலக்கமுற்ற நீங்கள்
அயலானிடம் சொல்லிப்போகிறீர்கள்
''அவனிடம் ஜாக்கிரதை"

நன்றி: கல்கி(05.09.10)

4 comments:

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்கு

தமிழ்நதி said...

பழகுவது கத்தியில் நடப்பதாகிவிட்டது. நுட்பமான விடயத்தைத் தொட்டிருக்கிறீர்கள். 'அவளிடம் ஜாக்கிரதை'என்று யாராவது சொல்லியிருப்பார்களா? என்று நினைத்துப் பார்க்க வைத்தது.

நெய்வேலி பாரதிக்குமார் said...

வழக்கம் போல உங்கள் சொல்லாடல் உங்கள் கவிதைக்கு கிரீடம் . நம்மைப் பற்றிய மதிப்பீடுகள் இப்படியாக உணரப்படதவர்களின் ஒற்றை விமர்சனமாகவே இருந்துவிடுகிறது. கவிதைகள் எப்படி வாசிக்கப்படாமலேயே கழுவேற்றப்படுகின்றனவோ அப்படியே சில மனிதர்களும் எடை போடப் படுகின்றனர் அருமையான கவிதை

நெய்வேலி பாரதிக்குமார் said...

வழக்கம் போல உங்கள் சொல்லாடல் உங்கள் கவிதைக்கு கிரீடம் . நம்மைப் பற்றிய மதிப்பீடுகள் இப்படியாக உணரப்படதவர்களின் ஒற்றை விமர்சனமாகவே இருந்துவிடுகிறது. கவிதைகள் எப்படி வாசிக்கப்படாமலேயே கழுவேற்றப்படுகின்றனவோ அப்படியே சில மனிதர்களும் எடை போடப் படுகின்றனர் அருமையான கவிதை