19 June, 2012

என் தேவனே... என் தேவனே...

திசைகளைப் பதற்றத்துக்குள்ளாக்கி
மாநரகசாலையில் விரையும்
ஞாயிற்றுக்கிழமை கசாப்புக்கடைக்காரனின்
இருசக்கர வாகனத்தில்
குறுக்குவாட்டாகக் கிடந்து கதறுகிற
மறியைப் பார்த்ததும்
நீங்கள் என்ன செய்வீர்கள்...
என் பிதாவே என் பிதாவே
ஏன் என்னைக் கைவிட்டீரென
கல்வாரி மலையில் அரற்றிய
என் தேவனே என் தேவனே

என்று கைத்தொழுவேன்
நான்.

4 comments:

நிலாமகள் said...

ஞாயிற்றுக்கிழமை கசாப்புக்கடைக்காரனின்
இருசக்கர வாகனத்தில்//

அதானே...! க‌டை திற‌க்க‌ப் போகும் அவ‌ச‌ர‌த்தில் தான் செய்வ‌த‌றியாம‌ல் வேக‌ம் காட்டிய‌ அவ‌னை ம‌ன்னித்து ர‌ட்சியும் என் தேவ‌னே...

'பரிவை' சே.குமார் said...

என் தேவனே...
என் தேவனே...
அருமை... அருமை...

செய்தாலி said...

ம்ம்ம் ...ம் (:
அருமை sir

கீதமஞ்சரி said...

மறிக்காய் அரற்றிய வரிகளில் தெரிகிறது மனம் பிசையும் வலி.