05 May, 2012

கோழிகள்



கோழிகளைக் கண்டால் ஒருவித எச்சரிக்கையோடுகூடிய
அசூயையும் தொற்றிக்கொண்டபோது இரைக்காக அவை
மலங்களைக் கொத்திக் கொண்டிருந்தன... எனச் சொன்னால்
நீங்கள் வாழத் தகுதியற்றவர்கள் நண்பர்களே...
குப்பைகளைக் கிளறி, குட்டிச்சுவர்மீது அலைந்து,
புழுதிக் குடைந்தாடி, எச்சங்களை உண்டு களித்து... என
உங்கள் குற்றச்சாட்டுகளையும் ஆமோதிக்கவே செய்கிறேன்... எனில்
நானும் அப்படித்தான் தோழர்களே...
அதுவும் சாமிக்கென நேர்ந்துவிட்ட கோழிகளிடமிருந்து
அபயஹஸ்தம் கிட்டிவிட்டால் அப்பப்பா மோட்சம்தான்.
அதிலும் அதிலும் பெட்டையோடு சுற்றிவந்து
கொண்டை நிமிர்த்திக் கொக்கரிக்கைப்பதைத் தரிசித்துவிட்டால்
அடடா ஜென்மாந்திரஜென்மமும் சாபல்யமடைந்திடும்.
வராதுவந்த ஓரிரண்டு வரன்களும் இரண்டொரு பவுனில் இடறிப்போக
கன்னிக்கழியாமலே காலம் கழியும் கோமதி அக்காவின்
பார்வை குவிமையத்தில் விரட்டி விரட்டி சேவலும்
விரண்டு மிரண்டு பெட்டையும் சேர்ந்து தொலைக்கிறதா?
அவற்றை வேறெதுவும் செய்யாது விழுந்து சேவித்துக்
கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.
கோழிகள் நாளையே ஆட்சி பீடமேறி
கோமதி அக்காவுக்கு இலவசத் திருமண திட்டத்தில்...

1 comment:

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு....