11 February, 2012

அப்பா

துறுதுறுவென நடுநிசிவரைக்கும்
தன் விளையாட்டை
நீட்டித்துக்கொண்டிருக்கும் மகனை
தூங்கலைன்னா டைனோசர் வந்து
தலையைக் கடுச்சுடும் கண்ணா
தூங்கு தூங்கு என
வாயைப் பிளந்து பிளந்து
மகனின் தலையைக் கடிப்பதுபோல
பாவனைக் காட்டுகிற அப்பா
ஒரு கணத்தின் முடிவில்
தூக்கத்தில் ஆழ்கிற மகனுக்கு
டைனோசராகிப் போகிறார்

4 comments:

Anonymous said...

உங்க முகத்தை பார்த்த பின் கதையே தேவையில்லை பாரதி..பாவம் பச்ச புள்ள!!!

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

கீதமஞ்சரி said...

பிரமாதம். குழந்தை மனவியலை அருமையாகப் படம்பிடித்தக் கவிதைக்குப் பாராட்டுகள்.

செய்தாலி said...

யதார்த்தமான வரிகள் சார்