08 June, 2011

மகரந்த அலை

யவ்வனம் சொட்டும் அவள் பார்வையில்
ஒரு குளம் விரிகிறது

வழுக்கும் பாசிகளிலிருந்து
ஒரு பச்சை தேவதை எழும்புகிறாள்
மேனியெங்கிலும் வழிந்து பரவுகிறது
மகரந்தக் காடு

தாழ்ந்துயரும் அவளது பருவ மூச்சு
ஒரு பட்டாம்பூச்சியாய்ச் சிறகசைக்க
உதிர்ந்து நகர்கின்றன
அந்தத் தேவதைத் துகள்கள்

இப்போது குளம் தேவதைக் குளமாக
தேவதையும் குளமாகி
மகரந்தமாய்த் ததும்பிக்கொண்டிக்கிறாள்

தாகம் போக்க குளத்திலிறங்கும்
அவன் கரைந்துபோகலாம்
ஒரு மகரந்த அலையில்

நன்றி:உயிர் எழுத்து - ஜூலை 2011

3 comments:

நிரூபன் said...

மகரந்தத்தினைக் குறியீடாக்கி நகரும் கவிதை அருமை சகோ.

நெய்வேலி பாரதிக்குமார் said...

குளம் தேவதைக் குளமாக
தேவதையும் குளமாகி
மகரந்தமாய்த் ததும்பிக்கொண்டிக்கிறாள் - அற்புதமான வரிகள் மிகவும் ரசித்தேன்

Thenammai Lakshmanan said...

கரையெல்லாம் மகரந்தம்..:))