11 December, 2010

கோழியை மறுதலித்தல்

மக்கிக்கெட்ட குப்பைகளைக் கிளறி
இங்கிதம் குலைந்து எல்லா இடத்தும்
புணர்ந்து தொலைத்து
குட்டிச் சுவமீதேறி கொக்கரிக்கும் கோழிகள்
உறுத்தல் உதறி சுவைத்து அலைகின்றன
எச்சச் சொச்சங்களை

ஒன்றுக்கும் உதவாதிருத்தல்
ஊர்ச்சுற்றித் திளைத்தல்
புழுதிக் குடைந்தாடி
போதையில் மிதத்தல்...
என்றாயிற்று கோழியின் குணங்கள்

சண்டைக்கோழி, அடைகோழி
வெடக்கோழி, பிராய்லர் கோழி
வகைப்படுத்தலாம் கோழிகளை

எனினும்
மனிதனைக் காவுகொண்டபடிக்கு
பம்மிபம்மி வந்துபோகும்
சாமிக்கென நேர்ந்துவிட்ட கோழிகளை
கோழிகளென ஒத்துக்கொள்ள
மறுதலிக்கிறான் ஜீவானந்தம்

2 comments:

நிலாமகள் said...

தம் இனமனைத்தையும் காவு கொள்ளும் மனித இனத்தை பழிவாங்கும் முகமாய் பம்மிப் பம்மி வரும் அக் கோழியை வதம் செய்யும் அவதாரமென கோயில் கட்டியா கும்பிடுவோம்... யார் வயிற்றுக்கோ தானே அதுவும்!!

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்கு