11 December, 2010

சித்திரையில் கசிந்த மனசு

வேப்பம்பூவிலும் மாம்பூவிலும்
போதமுற்றுச் சரியும் சித்திரையின்
ஏறுவெய்யில் ஊர்ந்துகொண்டிருக்க
மவ்னத்தை ஆரோகணித்தபடி
என் கைபற்றியிருந்தபோதுதான்
தண்ணென்று கசிந்த உன் மனசை
உணர்ந்தன விரல்கள்

நன்றி: கல்கி(23.01.11)

3 comments:

உயிரோடை said...

//ஏறுவெய்யில் ஊர்ந்துகொண்டிருக்க//

மிகவும் ரசித்தேன்

பா.ராஜாராம் said...

அருமை!

கோநா said...

super kathir.