30 September, 2010

முத்தம்

ஒளி சுவிகரித்துக்கொண்ட
உன் முத்தங்கள்தாம்
விண்மீன்களாயின
சிறகு முளைத்த முத்தங்களில்
தேவதைகள் தரிசனம் தந்தனர்
முத்தங்களைத் திருடி கூடுகட்டி
தேனீக்களாய் பரிணமித்தன குளவிகள்
முத்தங்கள் எட்டாது தலைசுளுக்கவே
நரிகள் சொல்லின்
அந்த முத்தம் புளிக்கும்
உன் முத்தங்களின் ஆழத்தில்
முத்தம் குடித்து முத்தம் குடித்து
முத்தமானான் அவன்

1 comment:

உயிரோடை said...

//நரிகள் சொல்லின்
அந்த முத்தம் புளிக்கும்//

நல்ல சிந்தனை. :)