15 June, 2010

பக்கத்துப் பக்கத்து வீடு

ஆதியில் எனக்கும் சாத்தானுக்கும்
பக்கத்துப் பக்கத்து வீடு
கொஞ்சமாய் நிரோத்துப் பொட்டலங்களையும்
மிதக்கும்படிக்காய் மதுப்புட்டிகளையும்
கைமாத்தாய் வாங்கிக்கொள்ளும் அளவுக்கு
அவன் எனக்குப் பரிச்சயம்
எப்போது கேட்டினும் இன்முகத்தோடு
அவன் பிரயோகிக்கும் புன்னகை
அந்தி சூரியனாய் மயக்கம் நல்கும்
முலைகனத்த மகளிரோடு
முப்போதும் மோகித்துக்கிடக்கும் அவனுக்கு
பிருஷ்டம் பெருத்த பெண்களோடும்
தொடுப்பு இருந்தது
காமப்பேராறு கரையறுக்கையில்
கரமதுனமும் உண்டு
லாகிரி வஸ்துகள் நீதிபரிபாலனம்
செய்யும் அவனது கொலுமண்டபத்து
அந்தப்புரத்துக்கு தேவகன்னியின் புனைவோடு
சிலபேர் வந்து திருப்தியோடு போவதுண்டு
அவன் அருகாமையின் ஷணங்கள்
பரவசங்களில் தோய்த்து எடுக்கப்பட்டதாயும்
புலன்களை நீவிவிடுவதாயும் தோற்றம் கொள்ளும்
யுவதிகளின் வாசனைகளால் நெய்யப்பட்டிருக்கும்
அவனது இல்லத்திலிருந்து ஊர்ந்துவரும்
இசையின் விச்ராந்தியில் கம்மென்று மணம்
பொறாமையுற்ற காலம்
பொய்யாய் வீசிப்போன வரத்தின்
சாயல் புனைந்த சாபமொன்றில்
வீழ்ச்சியுற்ற சாத்தான்
தீவாந்திரத் தனிமைக்குத் தள்ளப்பட்டு
கடவுளானான்
நான் மனிதனானேன்
நன்றி : சுகன் (ஜூன் 2010)

2 comments:

உயிரோடை said...

வாழ்த்துக‌ள்

ரா.நாகப்பன். said...

நல்ல கவிதை வாழ்த்துகள் நண்பா

ஈரமண்ணின் நேசத்துடன்,
ரா.நாகப்பன்.