08 June, 2010

சபிக்கிறது தாபம்

விசிறி எறியப்பட்ட
விலக்கப்பட்ட கனியின் விதையிலிருந்து
வேர்கொழித்துச் செழித்தெழுந்த
ஏதேனூடே வேட்கைகொண்டு போகிற
ஏவாளை பின்தொடர்கிறது
ஸர்ப்பம் வடிவம் வாங்கிய பாவம்

துஷ்டி வீட்டுக்காரனின் தொண்டையில்
திரண்டுருளும் துக்கத்தையொத்த
அவளின் பருவக்கனவுகளை ஊடறுத்துக்
கொட்டுகிறது நிச்சலனமுற்ற அருவி

காய்ந்துதிரும் சருகுகளைப் பற்றி
கீழ்விழும் ஏவாளின் சொற்கள்
பெருந்தனிமையின் கால்களில் மிதிபட
தரையை மெழுகித் திரும்புகிறது
சொற்களின் ரத்தம்

அந்தரத்தில் அலையும் பறவைகளின்
சிறகில் அறைவாங்கி பள்ளத்தாக்கில்
வீழ்ந்துபடுகிறது ஏக்கத்தின் கேவல்

முன்பொருகாலத்தில் ஆதாமை
புசித்த கனிக்கென
பொலிபோட்டுவிட்டார் பிதாவின் பிதா
ஆப்பிள்மரத்துக்கு அடியுரமாய்

தன்னைத்தானே புணரும் ஏவாளின் தாபம்
சபிக்கிறது கடவுளை
'ஏவாளாகக் கடவாய் சாத்தானே'

நன்றி : சிக்கிமுக்கி [பிப்ரவரி 2010]

4 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

மிக நல்ல கவிதை...சற்றே வித்தியாசமான மொழி...

-ப்ரியமுடன்
சேரல்

நேசமித்ரன் said...

நல்வாழ்த்துகள்
நல்ல கவிதை!!

உயிரோடை said...

வாழ்த்துக‌ள். ந‌ல்ல‌ க‌விதை.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

கதிர்
தங்கள் மினஞ்சல் கிடைக்குமா?

marthandan.j@gmail.com
நன்றி