31 May, 2010

கொள்முதல்

வசீகரச் செல்வாக்கு மிகுந்த
வார்த்தைகளைப் பெய்து
மனத்தை நனைக்குமவன்
கனவுகளின் விற்பனைப் பிரதிநிதி

கண்களின் குணத்துக்கேற்ப
கனவுகளை விநியோகிப்பதிலும்
கனவுகளைக் கைமாற்றிவிடுவதிலும்
கைதேர்ந்த மொழி அவன் நாவுக்கு
சொந்தமானது

கனவுகளை சூல்கொல்வதொன்றே
கண்களின் பிறவி பயனென
அவனுதிர்க்கும் சொல்வாக்கு
சில கண்களில் கனவுகளின் அபிலாசைகளைத்
துளிர்விக்கும்

யாருக்கும் இல்லையென இயம்பாது
இருக்கும் துண்டு கனவுகளைக்கூட
குறுக்கும் நெடுக்குமாய்ப் பிணைத்துவிடும்
அவன் சாமர்த்தியத்தில் சாமான்யத்துக்கேற்ப
சலுகை திட்டமும் உண்டு

கனவுகள் அற்றுப்போகும்
பின்னிரவுப் புழுக்கத்தில்
அக்கம் பக்கம் பார்வை செலுத்தி....
நெளிவுகளை நேர்த்திருத்தி,
சுருக்கங்களை நீவி, முலாம் பூசி
அவன் வைத்திருந்த சாத்தானின் கனவுகளை
கொள்முதல் செய்துகொண்டு போன
கடவுளின் கண்களில்
ஒளி பெருகத் துவங்கியது

ஈரமண்ணின் நேசம்|ஜூலை 2010

2 comments:

உயிரோடை said...

சாத்தானை விட‌ மாட்டீங்க போல‌. க‌விதை வித்தியாச‌மா ந‌ல்லா இருக்குங்க‌

srinivas prabu said...

kathir all your kavithaigal are good.
nice thought and good use of words and language
srinivas prabu