14 February, 2010

காமத்தின் நவரச சிங்காரிப்பு

1
போதும் இம்சிக்காதே
மர்மஸ்தானத்தில் ஊடுருவும்
மனசின் விரல்களைத் திருப்பிக்கொள்
விகாரப்படும் துறவின் இச்சையென
கவிகிற புன்னகை
சபிக்கப்பட்ட பாலையில் வன்மங்கொண்டூரும்
சர்ப்பத்தின் விஷமென நைச்சியமாய்ப் படர்ந்து
ஆன்மாவுக்குள் மரணத்தை விதைக்கிறது

நன்றி : சிக்கிமுக்கி (மார்ச் 2010)

1 comment:

பனித்துளி சங்கர் said...

அறிந்ததே இருந்தாலும் .
மீண்டும் புதுப்பித்தமைக்கு நன்றி !