13 October, 2016

எழுத்தாளர் என்.ஸ்ரீராம் எழுதிய குறிப்பு...

இரு வருடங்களுக்கு முன்பு கதிர்பாரதியின் " மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் " கவிதைத்தொகுப்பை வாசித்தேன்.நிலம்,பறவை,காற்று,மழை,ரயில் ,காதல்,காம்ம,நேசம் என கவிதைகளின் படிமவேர்கள் மன ஆழத்துக்குள் ஊருருவி பெரும் நெகிழ்ச்சிகொள்ள வைத்தன.தற்போது இவரின் " ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் " கவிதைத்தொகுப்பை வாசித்து முடித்தேன்.எப்போதும் நிலக்காட்சி சார்ந்து நிறைய எழுதுவதாக இருந்த என் இறுமாப்பை இவரின் ஒவ்வொரு கவிதைகளும் உடைத்தெரிந்தன.மணிப்புறாக்களும்,தட்டான்களும்,ஆட்டுக்கிடாய்களும்,வெட்டுக்கிளிகளும்,நீர்முள்ளிகளும்,அணில்களும் என கவி உயிர் பெற்று படிம பிணையல் நர்த்தனத்தில் ஆங்காங்கே ஏகாந்த சிற்பமாய் காலவெளியின் நுட்பத்தை சுமந்து காட்சி தருகின்றன.குள்ளநரி அழைக்கிறது வாரீர்,புன்செய் வெயிலாகும் முத்தம்,அழகு பகல் ,கற்றாழைப்பழம் சுவைத்தேன்,அலறி ஓடும் மவ்னம்,நான் என இவரின் கவிதைகள் என் மனதைவிட்டு நீங்கா தன்மை கொண்டதாக இருக்கிறது.நிலத்தை நேசிப்பவனாக ,நட்பை போற்றுபவனாக ,சகபடைப்பாளிகளை ஊக்குவிப்பவனாக இருக்கும் கதிர்பாரதி பெருங்கவிஞன் என்ற தலைச்சுமை சிறிதுமின்றி எளிமையாகப் பழக கூடியவர்.சமீப ஆண்டுகளில் என்னை ் ஆனந்த விகடனில் சிலகதைகள் எழுத வைத்து எங்கள் ஊர்ப்பக்கம் வாசிக்க வைத்த என் பெருமைக்கு சொந்தக்காரன்.விரைவில் இவரிடமிருந்து சில நல்ல சிறுகதைகளையும் ஒரு நண்பனாய் எதிர்பார்க்கிறேன் .

No comments: