11 March, 2013

வீடு


இரு கைவிரல்நுணிகளை
கோபுரமெனக் குவித்து
”வீடுன்னா இப்படித்தான் இருக்கும்”
என்று சிரிக்கிற திலீபன்
”மழை பெஞ்சா நனைஞ்சுடும்
அப்போ வீட்டை மூடிடணும்’’ என்று
இரு உள்ளங்கைகள் வரை
ஒட்டவைத்துக்கொள்கிறான்.
நனைந்தும்
நினைந்தும்
வாழ்வதற்கு
இந்த வீடு போதுமானதாக இருக்கிறது!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசனையான வரிகள்...

'பரிவை' சே.குமார் said...

ரசனை மிகுந்த கவிதை....