18 December, 2012

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் == கதிர்பாரதியின் கவிதை புத்தக வெளியீடு


வணக்கம் நண்பர்களே...


எனது முதல் கவிதைத் தொகுப்பு மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்
புது எழுத்து பதிப்பக வெளியீடாக வந்துவிட்டது. புத்தகத்தினை மிகவும் நேர்த்தியாக
கொண்டு வந்திருக்கிறார் புது எழுத்து பதிப்பாளர் திரு. மனோன்மணி. அட்டைப்படத்தை
கவிதைத் தனத்தோடு வடிவமைத்துக் கொடுத்த ஓவியர் மணிவண்ணன் அவர்களுக்கு
என் அன்பும் நெகிழ்வும். பின்னட்டைக் குறிப்புகளை மிகவும் வாஞ்சையோடு எழுதித் தந்திருக்கும்
கவிஞர் நரன் என் கவிதைகள் நீளும் திசைகளில் எல்லாம் இருக்கிறார்.

எதிர்வரும் 22.12.2012 சனிக்கிழமை அன்று எனது புத்தகத்தை கவிஞர் யூமா வாசுகி அறிமுகப்படுத்துகிறார்.
என் நண்பர் கவிஞர் வா.மணிகண்டன் புத்தகத்தைப் பெற்றுகொண்டு அறிமுகத்தை வழிமொழிகிறார்.
விழாவினை யாவரும்.காம் (அய்யப்பமாதவன், வேல்கண்ணன், ஜீவகரிகாலன்.... ) & புது எழுத்து பதிப்பகம் இணைந்து நடத்துகிறது.
விழாவில் கவிஞர் நிலாரசிகனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு மீன்கள் துள்ளும் நிசி வெளியீடும்
வெயில் நதி சிற்றிதழ் அறிமுகமும் நடக்கிறது

எனக்கு முக்கியமான இந்நிகழ்வில் உங்களின் வருகையையும் எதிர்பார்க்கிறேன். வாருங்கள் நண்பர்களே....


விழா குறித்த விவரங்களுக்கு....
http://www.yaavarum.com/archives/660


அன்புடன்
கதிர்பாரதி9841758984
 

4 comments:

Unknown said...

விழா சிறக்க வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

விழா சிறக்கவும், இன்னும் பல புத்தகங்கள் எழுதவும் வாழ்த்துக்கள்.

நிலாமகள் said...

மகிழ்வான வாழ்த்துகள்!

ஹ ர ணி said...

அன்புள்ள கதிர்பாரதி...


வாழ்த்துக்கள். உங்களின் முதல் கவிதை தொகுதியிலிருந்து இறகுகள் விரியடடும் தொடர்ந்து வாழ்வியலின் வானெங்கும். அவசியம் உங்கள் தொகுப்பினை அனுப்பி வையுங்கள் பணம் செலுத்திப் பெறும் அஞ்சலில். வாசித்துவிட்டு எழுதுவேன்.