24 August, 2012

சர்வநிச்சயமாக


இன்றைய என் காலை
ஒரு டி.வி.தொகுப்பாளினியின் குறும்புன்னகையால் 
திறந்துகொள்கிறது.
’நன்றாகத் தூங்கினீர்களா’ என வாஞ்சையாக வேறு
மாறுகிறது அந்தப் புன்னகை.
தொடர்பிலிருக்கும் நேயரின் பொருட்டு
அவளுதிர்க்கும் அச்சச்சோ,
’கண்கள் ஏன் சிவந்திருக்கின்றன’ என்று
என்னிடம் உரிமை எடுத்துக்கொள்கிறது.
அவ்வுரிமையில் சுடர்வது
பருவத்தில் கிளைத்து ஒரு வெங்கோடையில்
கருகிய என் பிஞ்சுக் காதல்தான்.
கோத்துக்கோத்துப் பிரியும் அவள் விரல்களை
என்னைந்து விரல்களாக்கிக் கோதிவிடுகிறேன்
தலைகேசங்களை.
நேயருக்கு வாழ்த்துச் சொல்லி
அவள் தவழவிடும் ஒரு மென்கானம் மூலம்
சொல்லொண்ணா பிரியத்துடன்
என் இன்றைய பொழுதைத் தொகுத்து வழங்கிவிட்டாள்.
இப்போது குளியலறையில்
தலைக்கு மேலிருந்து வழிகிறதே
சர்வநிச்சயமாக
அது
அவள் குரல்தான்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சிந்தனை வரிகள்...

வாழ்த்துக்கள்... நன்றி...

'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதை.

Rasan said...

வித்தியாசமாகவுள்ளது.
தொடருங்கள்...

Rasan said...

வித்தியாசமாகவுள்ளது.
தொடருங்கள்...

கிருஷ்ணப்ரியா said...

சர்வ நிச்சயமாக நல்ல கவிதை கதிர்.
அழகாய் இருக்கிறது...
கற்றுக் கொள்கிறேன் உங்களிடம்...

அப்பாதுரை said...

ஹா!
தடங்கலுக்கு இப்போதெல்லாம் வருந்துவதில்லையா?