13 September, 2011

இருக்கலாம்

உச்சி ஆகாயத்துக்குப் பக்கத்தில்
காற்றுவெளியில் நிச்சலனமுற்று
நீந்திக்கொண்டிருக்கும்
அந்தப் பருந்து,
நடுநெற்றியில் தீயெரிய
போதிமரத்தடியில்
ஆழ்நிஷ்டையிலிருக்கும்
சாக்கிய புத்தனின்
மனமாகவும் இருக்கலாம்

5 comments:

Unknown said...

நல்லா இருக்குங்க.

ராமலக்ஷ்மி said...

அருமை.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இன்றுதான் உங்கள் கவிதைகளைப் பார்க்கிறேன்.

நுழைந்தவுடன் கண்ணில் பட்ட இந்தக் கவிதை மனதிலும் பட்டது.

வாழ்த்துக்கள் கதிர்.

தமிழ் அலை said...

ஆழமான அவதானிப்பு...

Anonymous said...

இருக்கலாம்...
கவிதை நல்லாயிருந்தது...நண்பரே...